Saturday, December 04, 2010

அவர் (Hire) சைக்கிள் கடை அனுபவங்கள்!!!



என் மகளின் சைக்கிள் டயருக்கு பஞ்சர் போட வேண்டும் ஒரு வாரமாக என் மனைவி சொல்லிகொண்டேயிருந்தார். இன்று சனிக்கிழமையாயிற்றே..டிவிட்டரிலும்,பதிவுகளிலும் பெருசா படிக்க எதுமில்லாத காரணத்தால் சரி..சற்றே வீட்டு வேலைகளை பார்ப்போம் என்று சைக்கிளை தள்ளிக்கொண்டே கடையை நோக்கிச்சென்றேன்..நினைவுகள் சற்று பின்னோக்கி சென்றன.....


90-கள் வரை வாடகை சைக்கிள் கடைகள் இல்லாத ஊரே இல்லை என்ற நிலைமை இருந்தது.நம்மில் எல்லோரும் (தற்போது 30 வயதை கடந்தவர்கள்)எதாவது ஒரு சூழ்நிலையில் வாடகைக்கு சைக்கிள் எடுத்திருப்போம். தெரியாத ஊரில் அவ்வளவு சுலபத்தில் சைக்கிள் கிடைக்காது.”தெரிஞ்சா ஆள் பேர் சொல்லு..ஸ்கூல் பையை வைத்துவிட்டுப்போ” என்று பல கண்டிஷன் போடுவார்கள்.

இப்ப எல்லாம் ஆட்டோ எடுத்துப்போய்ட்டு வேலையை முடிச்சிட்டு வா என்று சொல்வதுபோல் அப்பவெல்லாம் அவர் சைக்கிள் எடுத்துட்டுப்போய் வேலையை முடிச்சிட்டு வா” என்று சொல்வார்கள்.

மணிக்கணக்கில்(Hourly basis) வாடகைக்கு கொடுக்கப்படுவதால் அவர் சைக்கிள் கடை என்று சொல்கிறார்கள் என்றே நான் பல வருடங்களாக நினைத்திருந்தேன்.பின்னர் தான் தெரிந்தது ஹையர் (Hire) என்பது மருவி அவர் என்றாகிவிட்டது வாடகை சைக்கிள் கடை என்ற நம்மில் பலருக்கு உடனையாக நினைவுக்கு வருவது வைதேகி காத்திருந்தாள் கவுண்ட மணி காமெடிதான்..”இரங்கநாதன் என்ற பெயருக்கெல்லாம் சைக்கிள் தரதில்ல”

சிறுவர்கள் வாடகைக்கு சைக்கிள் எடுத்துவிட்டு செய்யும் அலும்பு சொல்லி மாளாது.வாடகை சைக்கிள் கடைகளில் பெரிய கடிகாரம் மாட்டப்பட்டு இருக்கும்.இருந்தாலும் அதில் மணி பார்க்கமாட்டார்கள்.”அண்ணே முள்ளு இரண்டுல வந்தாச்சாண்ணே,ஆறுல வந்தா சொல்லுங்கண்ணே என்று இரவுண்டுக்கொருமுறை கேட்டு சைக்கிள் கடைக்காரரை டார்ச்சர் செய்வார்கள்.

பெரும்பாலும் பெற்றோர்கள் முதலில் காசு கொடுத்துவிட்டு (Prepaid) குழந்தைகளுக்கு வண்டி எடுத்து கொடுத்திருப்பார்கள்.ஆனால் நம்ம மக்களோ எக்ஸ்ட்ரா கொஞ்ச நேரம் ஓட்டிவிட்டு வண்டியை திருப்பி தருவார்கள்.

வண்டியை திருப்பிதரும்போது,பெல்-ல காணோம் சீட் கவர் மிஸ்ஸிங் என்று கடைக்காரர் சொல்ல அதெல்லாம் தெரியாது எடுக்கும்போதே இப்படித்தான் இருந்தது என்று விவாதம் நடப்பது சர்வசாதாரணம்.

இப்பொழுதெல்லாம் பெரியவர்கள் யாரும் வாடகைக்கு சைக்கிள் எடுப்பதாக தெரியவில்லை.மத்திய வர்க்க குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே சொந்தமாக சைக்கிள் கிடைத்து விடுகிறது.


சைக்கிள் கடையை சென்றடைந்தேன்.இப்பொழுதும் சிறியவர்கள் அங்கே வாடகைக்கு சைக்கிள் எடுத்து செல்கிறார்கள்.. பெரியவர்களுக்கான ஒரு சைக்கிளும் அங்கே வாடகைக்கு இல்லை.முற்றிலும் குழந்தைகள் சந்தையை நம்பியே வாடகை சைக்கிள் கடைகள் இயங்குகின்றன்.

சைக்கிள் கடை அமைப்பில் பெரிய மாறுதல் இருப்பதாக தெரியவில்லை.பஞ்சர் கண்டுபிடிக்க-அதே அகல் பேசினில் தண்ணிர் ப்ஞ்சர் ஒட்டும் முறையிலும் பெரிய மாற்றமில்லை.எழு எட்டு ஓட்டை சைக்கிள்,பழைய புதிய டயர்கள்,ஸ்பனர் செட் என்று அதே அடையாளங்கள் தொடர்கின்றன.

ஆனால் வாடகை சைக்கிள் கடைகளுக்கென்றே ஒரு சந்தை தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது.

சைக்கிள் வாடகை தவிர மற்ற வழிகளில் தொடர்ந்து வருமானம் வருவதாக கடைக்காரர் சொல்கிறார்.(காற்றப்படிப்பது,பஞ்சர் போடுவது ,ரிப்பேர் செய்வது போன்ற வகையில்).

தற்போதைய கட்டணங்கள்
பஞ்சர் ஒட்ட -ரூ7
காற்றடிக்க -ரூ 2
வாடகை கட்டண்ம்(சிறுவர் சைக்கிள்)-ரூ 5

Wednesday, December 01, 2010

போர்க்குற்றவா‏ளியுமான மஹிந்தவை பிரிட்டனில் கைது செய்வதற்கு நீங்கள் செய்யவேண்டியவை

போர்க்குற்றவா‏ளியுமான மஹிந்தவை பிரிட்டனில் கைது செய்வதற்கு நீங்கள் செய்யவேண்டியவை

இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழ்மக்களை படுகொலை செய்தும், போர்க்கைதிகளை சர்வதேச விதிகளுக்கு முரணாக சித்திரவதை செய்து படுகொலை செய்தும், தமிழின வரலாற்றுச் சான்றுகளை அழித்து தமிழர்கள் நிலத்தை அடையாளமின்றி அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதுமான சிங்கள பேரினவாத அரசாங்கத்தை தலைமையேற்று கொடுங்கோல் ஆட்சி நடாத்திவரும் இலங்கையின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச...
பிரித்தானியா வருகை தந்துள்ளதும், அவர் எதிர்வரும் 02-12-2010 அன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற உள்ளதுமானது தடுக்கப்படவேண்டிய விடயமாகவும், அதே சமயம் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரித்தானிய சட்டங்களுக்கு அமைவாக அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்துவரும் இனப்படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், என்பவற்றால் பலாயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தடுக்கக் கோரியும், இலங்கை அரசை தண்டிக்க கோரியும் உலகெங்கும் தமிழ்மக்கள் வீதிகளிலும், அரச செயலகங்களின் முன்பாகவும் பல ஆர்ப்பாட்டங்களை லட்சக்கணக்கில் திரண்டு நடாத்தியிருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் பலன் கிடைக்கக் கூடியதாக இச்சந்தர்ப்பம் அமைவதாலும், கடந்த இரண்டுவாரங்களின் முன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் அவர்கள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் மகிந்த கைதுசெய்யப்படுவதை தம்மால் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்திருந்ததை நினைவில் கொண்டு உடனடியாக இந்த நடவடிக்கையில் உலகத் தமிழர்கள் இறங்க வேண்டும்.

எனவே உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.

முறைப்பாட்டை அனுப்ப இங்கு அழுத்தவும்: http://www.fco.gov.uk/en/feedback

இவை எல்லாவற்றையும் மீறி 2 ஆம் திகதி அவர் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழ்கத்தில் உரை நடாத்தும் பட்சத்தில் அதை எங்கும் பல்லாயிரக்கணக்கில் பிரித்தானிய தமிழர்கள் கூடவேண்டியதும் அவசியமாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.



மின்னஞ்சல் அனுப்ப முடிந்தவர்கள் கீழ்காணும் மின்னஞ்சலூடாகவும் உங்கள் கோரிக்கைகளையும், உங்களிற்கு மஹிந்த ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் எழுதி அனுப்புங்கள். Proctors.office@admin.oxac.uk

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இணையத்தள முகவரி: http://www.fco.gov.uk/en/


ROCEDURE

1.Go to http://www.fco.gov.uk/en/feedback

2.Enter name ,email id, select subject as OTHER
3.Then write your letter

SAMPLE LETTER

Please arrest Mr.Mahinda Rajapakse.The Sri Lankan president and the sri lankan state did the genocide of Eelam Tamils.He with his state forces did aerial bombing and used artilleries on 10s of 1000s of Tamil civilians who were in the region called NO-...FIRE ZONE declared by the Sri lankan Sinhala dominant state.Sri Lankan army is exclusively Sinhalese.They did executions 1000sof Tamil civilians,raped 100s of Tamil woman.Sri Lankan state forces used phosphorous bombs on hospitals in Tamil areas.Sei Lanka's defense secretary Mr.Gotabaya Rajapaksa ,the president's brother said that anything beyonf the no fire zone was a legitimate target. Sri Lankan state has no tolerance for Press.The president's friend Lasantha Wikramathunga,the editor of English Newspaper was journalist from Sinhala ethnicity was killed by the government sponsored murders since he wrote an article criticizing the president and the state's war on Tamil people in the guise of eliminating the LTTE.Thissaiyanayam was a scribe in English print media and he was from Tamil ethnicity.He was imprisoned and sentenced to 20 years of imprisonment for criticizing the president and the state's war on Tamils.He won 2 international awards for his journalism.he was later released due to international pressure.

Sri Lankan state has no respect for democracy,equality,human rights,press freedom etc.Mr.Mahinda Rajapaksa who is the supreme authority on the state's armed forces is a racist,dictator ,tyrant , mass murder and war criminal

Thursday, October 28, 2010

கொடுங்கோலன் இராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல் குறித்து ஆதாரங்கள் கேட்கிறது-ஐ.நா








கொடுங்கோலன் இராஜபக்சேவின் இலங்கை இராணுவம் அப்பாவி ஈழத்தமிழர்கள் மீது நடத்திய மனித உரிமை மீறல்களை ஆராய்ந்து சொல்ல மூன்று நபர் குழு ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கி மூன் நியமித்துள்ளார்

இந்த குழு இறுதிப்போரின் சமயத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து செயலருக்கு அறிக்கை அளிக்கும் என்று தெரிகிறது.போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை இந்த குழுவிடன் மின்னஞ்சல் வழியாக கொடுக்கலாம்.

தனிநபரோ அல்லது அமைப்போ தங்கள் தரப்பு ஆதாரங்களை (பத்து பக்கங்களுக்கு மிகாமல்) ஐ.நாவின் குழுவிடம் மின்னஞ்சல் வழியே வழங்கலாம்.தகவல் கொடுப்பவரின் தொடர்பு விவரங்கள் கண்டிப்பாக தெரிவிக்கப்படவேண்டும்.அனைத்து தகவல்களும்,தனிநபர் விவரங்களும் இரகசியாமாக காக்கப்படும் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

விவரங்கள் அனுப்ப இறுதி நாள் 15-12-2010
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் panelofexpertsregistry@un.org

மேலதிக விவரங்களுக்கு panelofexpertsregistry@un.org என்ற முகவரியை தொடர்புகொள்ளுங்கள்.


கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை பயன் படுத்தில் ஆதாரங்களை தாராளமாக அனுப்பி வையுங்கள்.

Wednesday, August 25, 2010

இவர்களும் இந்த தலைமுறை குழந்தைகளே

திங்களன்று பிற்பகல் என் மாமனாரை ஒரு மருத்துவ பரிசோதனைக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றபோது வண்டி திடீரென பெட்ரோல் தீர்ந்ததால் நின்றுவிட்டது(அதற்கு முந்தைய நாள் பராமரிப்புக்காக கொடுத்து இருந்தேன்.அவர்கள் கட்டணத்துடன் பெட்ரோலையும் எடுத்துக்கொண்டனர்).

பெட்ரோல் நிலையம் 1 கிமீ தூரத்தில் உள்ளது.என்னடா உடல்நிலை சரியில்லாத மாமனாரை நடக்க வைத்துவிட்டோமே என்ற வருத்ததுடன் வண்டியை தள்ளிகொண்டே வந்தேன்.ஒரு சிறுவன் 10 அல்லது 11 வயது இருக்கும் சைக்கிள் ஒட்டிக்கொண்டு வந்தவன் அருகில் வந்து “என்ன அங்கிள் பெட்ரோல் இல்லையா” என்றான் கன்னடத்தில். ஆமாப்பா என்றேன்

மேலும் சில கேள்விகளை கன்னடத்தில் கேட்டான் நம்ம கன்னடம் மிகவும் மந்தம் என்பதால் அமைதியாக வண்டி தள்ளிக்கொண்டே வந்தேன்.

தீடிரென அந்த சிறுவன் ”அங்கிள் டு யு நோ இங்கிலிஷ்” என்றான்.தெரியுமென்றேன்.

உடனே அவன் “I can help you for buying petrol" you take my cycle and buy the petrol,I will be here and keep an eye on your scooter”.

அந்த சாலை ஆள் அரவமற்ற சாலை பகலிலே திருட்டு நடக்கும் இடம் ஆகவே சற்று தயங்கினேன்.அந்த சிறுவனும் சலிக்காமல் “If its so,I will go and buy the petrol for you என்றான் சரி என்று ஒரு நம்பிக்கையுடன் ரூ 30 கொடுத்து பாட்டிலும்கொடுத்தேன்.

அடுத்த நிமிடம் வண்டியில் சிட்டாக பறந்தான் அந்த சிறுவன். வருவானா மாட்டானா என்று சாலையை வெறித்து பார்த்துகொண்டே இருந்தேன்.பத்தாவது நிமிடத்தில் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தான். இந்த சிறுவனையா சந்தேகத்துடன் பார்த்தோம் என்று வெட்கப்பட்டேன். சாக்லேட் வாங்கிகொள்ளப்பா என்று ரூ5 கொடுத்தேன்.தாங்கஸ் அங்கிள் என்று சொல்லி சிட்டாக பறந்தான்.

அந்த சிறுவனது பெயரை கூட கேட்க மறந்துவிட்டேன் :(

Saturday, June 26, 2010

செம்மொழி மாநாடு ஒரு புகைப்பட பார்வை.

பதிவர் அரவிந்தன் நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவிடும் காட்சி



அரங்கில் நம் தளபதி தல பாலா பாரதி!!!



வி.ஜ.பிக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏராள தராளமான இடம்



இங்கேயுமா..? ஒரு வேளை பக்தி இலக்கியம் விக்குராங்களோ..?!




துணை முதல்வர் ஸ்டாலின் ஆர்வமுடன் நமது வலைப்பூக்கள் பயில்ரங்கை பார்வையிடுகிறார்



இளைஞர் ஒருவருக்கு பதிவு ஆரம்பிப்பது எப்படி என்று பதிவர் அரவிந்தன் பால பாடம் நடத்துகிறார்.

தமிழ் வலைப்பூக்கள் பயிலரங்கம் எனது பார்வையில் சில துக்கடாக்கள்!!!-2

C-DAC எனும் மத்திய அரசு அரங்கில் மென்பொருள் சிடி இலவசமாய் வழுங்குகின்றனர்.சிடி கொடுங்க என்றால் பெயர்,ஊர்,தொலைப்பேசி எண் கேட்கிறார்கள்.excuse me May I have a Tamil CD please என்றவுடன் கேள்வி கேட்காமல் சிடி கொடுத்தனர் எ.கொ.ச!

கரை வேட்டி கட்டி கொண்டுருந்தால் பல அரங்குகளுக்கு உடனடியாக செல்ல அனுமதி கிடைக்கிறது.

வந்திருந்த பொதுமக்களில் ஒருவர் “உங்களை நீயா நானாவில் பார்த்திருக்கேன் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.

கூகிளில் தமிழில் தேடும் வசதி இருப்பது பலருக்கு தெரியவில்லை.விளக்கிச்சொன்னபின் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்.

தமிழ்பாடல் வரிகள் இணையத்தில் தேடுவது குறித்து ஆவலாய் கேட்கிறார்கள்.

செம்மொழி மாநாட்டின் மைய அரங்கில் ஏராளமான காக்கைகள், அந்த பக்கம் செல்லவே பயமாய் இருக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம் இத்தனை காவலர்கள் மட்டும் இல்லாதிருந்தால் இந்த மக்கள் கூட்டத்தினை நிச்சயம் சமாளித்திருக்க முடியாது.

வலைப்பூக்கள் பயிலரங்கிற்கு வந்த மொத்த பதிவர்கள் எண்ணிக்கை ------- 2 (லக்கி மற்றும் பாலபாரதி)# சும்மா ஒரு தகவலுக்காக

உங்களுக்கான “வெப்சைட்” உருவாக்கலாம் வாங்க என்ற கருப்பொருளில் வலைப்பயிற்சி கொடுத்து வருகிறோம்

செம்மொழி மாநாடு தமிழியியிணைய கண்காட்சி அரங்கிலிருந்து அரவிந்தன்

தமிழ் வலைப்பூக்கள் பயிலரங்கம் எனது பார்வையில் சில துக்கடாக்கள்!!!

வலைப்பக்கத்தில் என்னவெல்லாம் எழுதலாம் என்று ஒரு பெண்மணி கேட்டார்”நீங்க கடைக்கு சென்று காய்கறி வாங்குவதை பற்றியும் எழுதலாம் என்றேன்".

"என்னங்க கிண்டல் செய்யறிங்களா" என்றார்.உடனே துளசி டீச்சர் எழுதிய காய்கறி வாங்கிய அனுபவ பதிவினை காட்டினேன் ஆச்சர்யமடைந்தார்.




வலைப்பதிவுக்கு நல்ல பெயர் தேர்வு செய்ய நம்மையே பலர் ஆலோசனை கேட்டனர்.காவலர் ஒருவரிடம் சிரிப்பு போலிஸ் என்ற பெயரில் ஒரு வலைப்பக்கம் இருக்கிறது என்றவுடன் விழுந்து விழுந்து சிரித்தார்.அப்பறம் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி “எங்கள வச்சு காமெடி கீமிடி பன்னலையே”.

Friday, June 25, 2010

செம்மொழி மாநாட்டின் தமிழியிணைய கண்காட்சி அரங்கிலிருந்து...













செம்மொழி மாநாடு தமிழியிணைய கண்காட்சி அரங்கிலிருந்து....ஒரு நேரடி பார்வை..

செம்மொழி மாநாட்டின் தமிழியிணைய கண்காட்சியில் தமிழ் விக்கிபிடியா அரங்கிலிருந்து..

அரங்கமெங்கும் பொது மக்கள் ஆர்வமாக தமிழ் மென்பொருள் குறித்து கேள்வி கேட்கிறார்கள்

அரங்கமெங்கும் பொது மக்கள் ஆர்வமாக தமிழ் மென்பொருள் குறித்து கேள்வி கேட்கிறார்கள்

வலைப்பதிவு தொடங்குவது குறித்து மக்கள் ஆர்வமாக கேள்வி கேட்கின்றார்கள்

இன்னமும் தமிழ் கீ போர்ட் தனியா கிடைக்குமா என்று கேட்கிறார்கள்

கண்காட்சியில் அனைவரும் கேட்பது எங்கே இலவச சி.டி?

அமைச்சர் வந்ததும் உடன் அல்லக்கைகள் எங்கிருந்தோ ஒடி வந்து ஒட்டிக்கொள்கின்றன.

மாநாட்டில் திமுக கொடிகள் இல்லாவிட்டாலும் ஏராளமான கரை வேட்டிகளை காண முடிகிறது
தமிழ் தட்டச்சு தெரிந்தால் அரசாங்க வேலையில் முன்னுரிமை கிடைக்குமா? -பொது மக்களில் ஒருவர் கேட்ட கேள்வி

இலவச மென்பொருள் கேட்டு வருவோரை கிழக்கின் அரங்கிற்க்கு அனுப்பி வருகிறேன்

தமிழில் சோதிட மென்பொருள் குறித்து மக்கள் ஆர்வமாய் விசாரிக்கிறார்கள்

இரவு 8 மணிக்கு அடுத்த பதிவில் சந்திப்போம்.

.

Thursday, June 10, 2010

என்னுடைய டீவிட்களின் தொகுப்பு!!!

வெவ்வேறு நாட்களில், பல்வேறான மனநிலையில் என்னுடைய டீவிட்களை பதிவாக இங்கு இடுகிறேன்.

என்னோடCEO-க்கு மடல்அனுப்பும்போது போது “ஹாய்...” ஆனால் மகளின் வகுப்பு ஆசிரியருக்கு“Respected Madam" என்று விடுப்பு கடிதம்எழுதவேண்டியுள்ளது

20000 மக்களின் மரணத்துக்கு காரணமான யூனியன் கார்பைட் முன்னாள் தலைவர் ஹவாய் தீவில் ஹாய்யாக வாழ்கிறான்.பிடிக்க துப்பில்ல

பெங்களுரில் பெரிய அங்காடி வளாகங்களில் சைக்கிள் நிறுத்த அனுமதியில்லை.

எத்துனை ஓட்டுக்கள் வேண்டுமானலும் ஒரே அலைப்பேசியிலிருந்து சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிக்கு போடலாமாம்.கள்ள ஓட்டினை காசுக்காக அனுமத்திக்கும் ஊடகங்கள் :(

அலுவலகத் தோழர் “ஃபோரம் மால் சென்று டைம் பாஸ் செய்யலாம் என்று அழைத்தார்.வார நாட்களில் அலுவலகம் தவிர வேறங்கும் டைம் பாஸ் செய்வதில்லை என்றேன்.

கேரள நிருபர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்வி பிரமருக்கு புரியவில்லை.பின்னர் அதே கேள்வியை ஆங்கிலத்தில் வேறொருவர் சொல்ல பிரமருக்கு புரிந்தது .

அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு முள்வேலிக்குள் வாழ்க்கை..காந்திய வழியில்போராட வேண்டும் என்ற மகாத்மாக்கள் இப்ப என்ன சொல்வார்கள்.?

மின்சாரமில்லை வீட்டில்.மொட்டை மாடியில் லாப்ட்டாப்பிலிருந்து டீவிட்..வாழ்க்கை சுகமாக இருக்கிறது.

கனிமொழி குஷ்புவுக்கு திமுகவின் கொள்கைகளை எடுத்துரைத்தபின் திமுகவில் சேர குஷ்பு முடிவெடுத்தார்

நளினி நான்கு வருடமாக செல் பேசி பயன்படுத்தினாராம். ஒரு வேளை பிரியங்கா பிரியமா கொடுத்திருப்பாரோ

முகம் தெரியாத வாடிக்கையாளரை நலமா என்று விசாரிக்கிறார்கள் பக்கத்து இருக்கையில் இருப்பவனை பார்த்து வணக்கம் சொல்ல யோசிக்கிறார்கள்

வானம் இருண்டு வருகிறது..குளிர் காற்று வீசுகிறது..எங்காவது மயில் தோகை விரித்து ஆடலாம்

ஜோ வென் மழை பெய்கிறது...ஜன்னல் வழியே இரசித்து பாக்கிறேன்.கையில் காபி கோப்பை பக்கத்தில் மனைவி குழந்தை தோழியின் வீட்டில்

Saturday, June 05, 2010

பதிவர் சந்தன முல்லை அவர்களுக்கு சில கேள்விகள்.?

சந்தன முல்லை,

http://sandanamullai.blogspot.com/2010/06/blog-post_04.html இந்த கட்டுரையிலும் மங்களுர் சிவாவின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.

வினவின் கட்டுரை தங்கள் பார்வைக்கு வந்த பிறகே பதிவேற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

அப்படியிருக்கையில் மங்களுர் சிவா,லதானந்த மற்றும் அபி அப்பா போன்றவர்கள் குறித்தான அவதூறுகள் குறித்து எதுவும் தங்களுக்கு தவறாக தோன்றவில்லையா.? அல்லது என்னைப்பற்றி நரசிம் தவறாக எழுதியதைப்போல் நாமும் வேறு சிலரைப்போல் போகிற போக்கில் எதாவது சொல்லிவிட்டு போகலாம் என்ற அலட்சியமா.?

மங்களுர் சிவா வின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தாங்களும் தங்கள் ஆதரவாளர்களும் தொடர்ந்து கள்ள மெளனம் சாதிப்பதேன்.?

நரசிம் எழுதிய புனைவும் கார்க்கியின் பின்னுட்டமும் அனைவருக்கும் மிகுந்த கோபத்தினை ஏறபடுத்தியது.நேரில் பார்க்கும்போது ஒரு அறை விடலாம் என்றுகூட தோன்றியது.

அதே நேரத்தில் திட்டமிட்டே தெரிந்தே சிலரைப்பற்றி அவதூறுகளை அள்ளிதெளித்த வினவின் கட்டுரைக்கு நீங்களும் ஒரு காரணம் என்பதை நீங்கள் ஏற்று கொண்டே ஆகவேண்டும்.


ஆக,உங்களுக்கும் மற்றதோழர்களும் இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

நரசிம்மின் புனைவால் உங்களுக்கு ஏற்ப்பட்ட கோபத்தினை நாங்கள் முழுவதும் புரிந்துகொள்வதுபோல் நீங்களும் பாதிக்கப்பட்ட மற்ற பதிவர்களின் ஆதங்கத்தையும் துயரங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இருப்பபதாகவே எனக்கு தோன்றுகிறது.

அரவிந்தன்
பெங்களுர்

Wednesday, April 21, 2010

நித்தியானந்தன் கைது!!!!

நித்தியானந்தன் கைது!!!!

இமாச்சல பிரதேச காவல்துறையின் உதவியுடன் கர்நாடக காவல்துறையினர் நித்தியானந்தனை கைது செய்தனர்.

சோலன் என்ற இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஒரு மாதமாக நடந்த நித்தியனந்தன் தேடுதல்வேட்டை முடிவுக்கு வந்தது.

நாளை பெங்களுர் அழைத்துவரப்படுவார் என்று தெரிகிறது.

Wednesday, March 31, 2010

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்-பெங்களுர்

பெங்களூர் நகரம் 1946 எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களின் தொகுப்பு

இந்த படத்திலுள்ள பதிவு எண்னை பாருங்க BAN 555 அப்ப பெங்களுரில் 1000 குறைவான வாகனங்களே இருந்திருக்கின்றன.



மேயொ ஹால் என்றழைக்கப்படும் நீதிமன்ற அலுவலகம்



ஓரியண்டல் பில்டிங்ஸ் என்ற ஆயுள் காப்பீட்டு நிறுவன கட்டிடம்






Tuesday, March 30, 2010

தமிழ் வலைப்பதிவர் குழுமம்-எனது புரிதல்கள்

மின் மடலாற் குழுக்கள்,டிவிட்டர்,பதிவுதளங்கள்,சோசியல் நெட்வொர்க் தளங்கள் என எங்கு தமிழில் எழுதினாலும் அவர் தமிழ்பதிவர்

மருத்துவர்களுக்கும்,வழக்கறிஞர்களுக்கு எதற்க்கு சங்கம் தேவையோ அதேப்போல் பதிவருக்கும் சங்கம் தேவை

தொழில்நுட்ப நிறுவனங்களோடும்,அரசாங்கத்தோடவும் பல்வேறு காலக்கட்டங்களில் நாம் இணைந்து பணியாற்ற் வேண்டியுள்ளது அது அமைப்பு ரீதியாக இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

Technical know how பெரும் நிறுவனங்களிடமிருந்து பெறுவது எளிமையாகிவிடும்

நாளை கூகுள் நிறுவனம் புதிய வெளியீட்டின்போது நம் கருத்தினை கேட்க துவங்குவர்

நாளை அரசாங்கம் பதிவுலகம் குறித்து ஒரு தவறான சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் குழுமமாக இருந்தால் அதை எதிர்ப்பது எளிது

அனைவரும் ஒரு குடையின் கீழ் வரவேண்டிய அவசியமும் இல்லை.விருப்பம் இருப்பவர்கள் சேரலாம் இதென்ன தொழிற்சங்கமா அனைவரும் ஒன்றியினைய

உற்ப்பினர், உறுப்பினர் அல்லாதவர் யார் வேண்டுமானலும் தொடர்ந்து எழுதலாம். இதென்ன திரைப்பட யூனியனா கார்டு இருந்தால்தான் எழுதலாம் என்று சொல்ல

குழுமம் எந்த பதிவரின் கருத்துக்கும் தடையாக இருக்கப்போவதில்லை. சங்கம் யாரின் எழுத்துக்களை தணிக்கை செய்யும் சென்சார் போர்டல்ல

இது சினிமா யூனியன் அல்ல பிடிக்காதவர்களுக்கு ரெட் கார்டு போடுவதற்கு.

இணையத்தின் கட்டற்ற சுதந்திரம் தொடர்ந்து இருக்கும் என்றே நம்புகிறேன்

உங்கள் பிரச்சினை குழுமம் ஆரம்பிப்பதா அல்லது குறிப்பிட்ட சிலர் அதை ஆரம்பிப்பதா.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்