Saturday, June 26, 2010

செம்மொழி மாநாடு ஒரு புகைப்பட பார்வை.

பதிவர் அரவிந்தன் நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவிடும் காட்சி



அரங்கில் நம் தளபதி தல பாலா பாரதி!!!



வி.ஜ.பிக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏராள தராளமான இடம்



இங்கேயுமா..? ஒரு வேளை பக்தி இலக்கியம் விக்குராங்களோ..?!




துணை முதல்வர் ஸ்டாலின் ஆர்வமுடன் நமது வலைப்பூக்கள் பயில்ரங்கை பார்வையிடுகிறார்



இளைஞர் ஒருவருக்கு பதிவு ஆரம்பிப்பது எப்படி என்று பதிவர் அரவிந்தன் பால பாடம் நடத்துகிறார்.

தமிழ் வலைப்பூக்கள் பயிலரங்கம் எனது பார்வையில் சில துக்கடாக்கள்!!!-2

C-DAC எனும் மத்திய அரசு அரங்கில் மென்பொருள் சிடி இலவசமாய் வழுங்குகின்றனர்.சிடி கொடுங்க என்றால் பெயர்,ஊர்,தொலைப்பேசி எண் கேட்கிறார்கள்.excuse me May I have a Tamil CD please என்றவுடன் கேள்வி கேட்காமல் சிடி கொடுத்தனர் எ.கொ.ச!

கரை வேட்டி கட்டி கொண்டுருந்தால் பல அரங்குகளுக்கு உடனடியாக செல்ல அனுமதி கிடைக்கிறது.

வந்திருந்த பொதுமக்களில் ஒருவர் “உங்களை நீயா நானாவில் பார்த்திருக்கேன் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.

கூகிளில் தமிழில் தேடும் வசதி இருப்பது பலருக்கு தெரியவில்லை.விளக்கிச்சொன்னபின் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்.

தமிழ்பாடல் வரிகள் இணையத்தில் தேடுவது குறித்து ஆவலாய் கேட்கிறார்கள்.

செம்மொழி மாநாட்டின் மைய அரங்கில் ஏராளமான காக்கைகள், அந்த பக்கம் செல்லவே பயமாய் இருக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம் இத்தனை காவலர்கள் மட்டும் இல்லாதிருந்தால் இந்த மக்கள் கூட்டத்தினை நிச்சயம் சமாளித்திருக்க முடியாது.

வலைப்பூக்கள் பயிலரங்கிற்கு வந்த மொத்த பதிவர்கள் எண்ணிக்கை ------- 2 (லக்கி மற்றும் பாலபாரதி)# சும்மா ஒரு தகவலுக்காக

உங்களுக்கான “வெப்சைட்” உருவாக்கலாம் வாங்க என்ற கருப்பொருளில் வலைப்பயிற்சி கொடுத்து வருகிறோம்

செம்மொழி மாநாடு தமிழியியிணைய கண்காட்சி அரங்கிலிருந்து அரவிந்தன்

தமிழ் வலைப்பூக்கள் பயிலரங்கம் எனது பார்வையில் சில துக்கடாக்கள்!!!

வலைப்பக்கத்தில் என்னவெல்லாம் எழுதலாம் என்று ஒரு பெண்மணி கேட்டார்”நீங்க கடைக்கு சென்று காய்கறி வாங்குவதை பற்றியும் எழுதலாம் என்றேன்".

"என்னங்க கிண்டல் செய்யறிங்களா" என்றார்.உடனே துளசி டீச்சர் எழுதிய காய்கறி வாங்கிய அனுபவ பதிவினை காட்டினேன் ஆச்சர்யமடைந்தார்.




வலைப்பதிவுக்கு நல்ல பெயர் தேர்வு செய்ய நம்மையே பலர் ஆலோசனை கேட்டனர்.காவலர் ஒருவரிடம் சிரிப்பு போலிஸ் என்ற பெயரில் ஒரு வலைப்பக்கம் இருக்கிறது என்றவுடன் விழுந்து விழுந்து சிரித்தார்.அப்பறம் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி “எங்கள வச்சு காமெடி கீமிடி பன்னலையே”.

Friday, June 25, 2010

செம்மொழி மாநாட்டின் தமிழியிணைய கண்காட்சி அரங்கிலிருந்து...













செம்மொழி மாநாடு தமிழியிணைய கண்காட்சி அரங்கிலிருந்து....ஒரு நேரடி பார்வை..

செம்மொழி மாநாட்டின் தமிழியிணைய கண்காட்சியில் தமிழ் விக்கிபிடியா அரங்கிலிருந்து..

அரங்கமெங்கும் பொது மக்கள் ஆர்வமாக தமிழ் மென்பொருள் குறித்து கேள்வி கேட்கிறார்கள்

அரங்கமெங்கும் பொது மக்கள் ஆர்வமாக தமிழ் மென்பொருள் குறித்து கேள்வி கேட்கிறார்கள்

வலைப்பதிவு தொடங்குவது குறித்து மக்கள் ஆர்வமாக கேள்வி கேட்கின்றார்கள்

இன்னமும் தமிழ் கீ போர்ட் தனியா கிடைக்குமா என்று கேட்கிறார்கள்

கண்காட்சியில் அனைவரும் கேட்பது எங்கே இலவச சி.டி?

அமைச்சர் வந்ததும் உடன் அல்லக்கைகள் எங்கிருந்தோ ஒடி வந்து ஒட்டிக்கொள்கின்றன.

மாநாட்டில் திமுக கொடிகள் இல்லாவிட்டாலும் ஏராளமான கரை வேட்டிகளை காண முடிகிறது
தமிழ் தட்டச்சு தெரிந்தால் அரசாங்க வேலையில் முன்னுரிமை கிடைக்குமா? -பொது மக்களில் ஒருவர் கேட்ட கேள்வி

இலவச மென்பொருள் கேட்டு வருவோரை கிழக்கின் அரங்கிற்க்கு அனுப்பி வருகிறேன்

தமிழில் சோதிட மென்பொருள் குறித்து மக்கள் ஆர்வமாய் விசாரிக்கிறார்கள்

இரவு 8 மணிக்கு அடுத்த பதிவில் சந்திப்போம்.

.

Thursday, June 10, 2010

என்னுடைய டீவிட்களின் தொகுப்பு!!!

வெவ்வேறு நாட்களில், பல்வேறான மனநிலையில் என்னுடைய டீவிட்களை பதிவாக இங்கு இடுகிறேன்.

என்னோடCEO-க்கு மடல்அனுப்பும்போது போது “ஹாய்...” ஆனால் மகளின் வகுப்பு ஆசிரியருக்கு“Respected Madam" என்று விடுப்பு கடிதம்எழுதவேண்டியுள்ளது

20000 மக்களின் மரணத்துக்கு காரணமான யூனியன் கார்பைட் முன்னாள் தலைவர் ஹவாய் தீவில் ஹாய்யாக வாழ்கிறான்.பிடிக்க துப்பில்ல

பெங்களுரில் பெரிய அங்காடி வளாகங்களில் சைக்கிள் நிறுத்த அனுமதியில்லை.

எத்துனை ஓட்டுக்கள் வேண்டுமானலும் ஒரே அலைப்பேசியிலிருந்து சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிக்கு போடலாமாம்.கள்ள ஓட்டினை காசுக்காக அனுமத்திக்கும் ஊடகங்கள் :(

அலுவலகத் தோழர் “ஃபோரம் மால் சென்று டைம் பாஸ் செய்யலாம் என்று அழைத்தார்.வார நாட்களில் அலுவலகம் தவிர வேறங்கும் டைம் பாஸ் செய்வதில்லை என்றேன்.

கேரள நிருபர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்வி பிரமருக்கு புரியவில்லை.பின்னர் அதே கேள்வியை ஆங்கிலத்தில் வேறொருவர் சொல்ல பிரமருக்கு புரிந்தது .

அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு முள்வேலிக்குள் வாழ்க்கை..காந்திய வழியில்போராட வேண்டும் என்ற மகாத்மாக்கள் இப்ப என்ன சொல்வார்கள்.?

மின்சாரமில்லை வீட்டில்.மொட்டை மாடியில் லாப்ட்டாப்பிலிருந்து டீவிட்..வாழ்க்கை சுகமாக இருக்கிறது.

கனிமொழி குஷ்புவுக்கு திமுகவின் கொள்கைகளை எடுத்துரைத்தபின் திமுகவில் சேர குஷ்பு முடிவெடுத்தார்

நளினி நான்கு வருடமாக செல் பேசி பயன்படுத்தினாராம். ஒரு வேளை பிரியங்கா பிரியமா கொடுத்திருப்பாரோ

முகம் தெரியாத வாடிக்கையாளரை நலமா என்று விசாரிக்கிறார்கள் பக்கத்து இருக்கையில் இருப்பவனை பார்த்து வணக்கம் சொல்ல யோசிக்கிறார்கள்

வானம் இருண்டு வருகிறது..குளிர் காற்று வீசுகிறது..எங்காவது மயில் தோகை விரித்து ஆடலாம்

ஜோ வென் மழை பெய்கிறது...ஜன்னல் வழியே இரசித்து பாக்கிறேன்.கையில் காபி கோப்பை பக்கத்தில் மனைவி குழந்தை தோழியின் வீட்டில்

Saturday, June 05, 2010

பதிவர் சந்தன முல்லை அவர்களுக்கு சில கேள்விகள்.?

சந்தன முல்லை,

http://sandanamullai.blogspot.com/2010/06/blog-post_04.html இந்த கட்டுரையிலும் மங்களுர் சிவாவின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.

வினவின் கட்டுரை தங்கள் பார்வைக்கு வந்த பிறகே பதிவேற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

அப்படியிருக்கையில் மங்களுர் சிவா,லதானந்த மற்றும் அபி அப்பா போன்றவர்கள் குறித்தான அவதூறுகள் குறித்து எதுவும் தங்களுக்கு தவறாக தோன்றவில்லையா.? அல்லது என்னைப்பற்றி நரசிம் தவறாக எழுதியதைப்போல் நாமும் வேறு சிலரைப்போல் போகிற போக்கில் எதாவது சொல்லிவிட்டு போகலாம் என்ற அலட்சியமா.?

மங்களுர் சிவா வின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தாங்களும் தங்கள் ஆதரவாளர்களும் தொடர்ந்து கள்ள மெளனம் சாதிப்பதேன்.?

நரசிம் எழுதிய புனைவும் கார்க்கியின் பின்னுட்டமும் அனைவருக்கும் மிகுந்த கோபத்தினை ஏறபடுத்தியது.நேரில் பார்க்கும்போது ஒரு அறை விடலாம் என்றுகூட தோன்றியது.

அதே நேரத்தில் திட்டமிட்டே தெரிந்தே சிலரைப்பற்றி அவதூறுகளை அள்ளிதெளித்த வினவின் கட்டுரைக்கு நீங்களும் ஒரு காரணம் என்பதை நீங்கள் ஏற்று கொண்டே ஆகவேண்டும்.


ஆக,உங்களுக்கும் மற்றதோழர்களும் இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

நரசிம்மின் புனைவால் உங்களுக்கு ஏற்ப்பட்ட கோபத்தினை நாங்கள் முழுவதும் புரிந்துகொள்வதுபோல் நீங்களும் பாதிக்கப்பட்ட மற்ற பதிவர்களின் ஆதங்கத்தையும் துயரங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இருப்பபதாகவே எனக்கு தோன்றுகிறது.

அரவிந்தன்
பெங்களுர்