Monday, June 23, 2008

யாரிடம் சொல்லி அழ

அன்பு நண்பர்களே,

எனது மனைவி கடுமையான மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவு காரணமாக சென்ற வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த பதினோரு வருட திருமண வாழ்க்கையில் முதன்முறையாக மருத்துவமனை வாசம்.

தற்பொழுது மருத்துவமனை சிகிச்சை முடிந்து ,வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்.

மஞ்சள் காமாலையின் வீரியம் சிறிதே குறைந்துள்ளது.கடுமையான பத்திய சாப்பாடும்,நல்ல ஒய்வும்தான் விரைவில் நோயின் கடுமை குறைய எதுவாகவுள்ளது.

மஞ்சள் காமாலையின் தாக்கத்தால் எடை குறைந்து மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார்.

பல வருடங்களுக்கு பிறகு வீட்டில் வெறுமை..தனிமை மிகவும் வாட்டி வதைக்கிறது.(மனைவி தற்சமயம் அவங்க அம்மா வீட்டில் ஒய்வு எடுக்கிறார்).

வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் நீக்கமற நிறைந்திருந்த அவளை ,தற்சமயம் பார்க்க முடியாமல் நான் படும் வேதனையை யாரிடம் சொல்லி அழ

நாற்பது வயதினை நெருங்கும் ஒரு ஆண் மகன் தன்னுடைய இந்த வேதனைய யாரிடம் பகிர்ந்துகொள்ள முடியும்.?

அரவிந்தன்