Sunday, April 06, 2008

அய்யா கலைஞர் அவர்களுக்கு ஒரு கேள்வி..???

அய்யா கலைஞர் அவர்களே!!!

இந்த ஒகனேக்கல் குடிநீர் திட்டத்திற்க்கு சென்ற மாதம் நீங்கள் அடிக்கல் நாட்டும் போது கர்நாடகாவில் என்ன ஜனநாயக ஆட்சியா நடந்து கொண்டிருந்து.

இப்போது மட்டும் என்ன மாற்றம் .மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சி வரட்டும் பேசி தீர்த்து கொள்ளலாம் என்று திடீர் பல்டி..?

எதன் அடிப்படையில் "நீங்கள் பேச்சு வார்த்தை" நடத்த போறிங்க சொல்லுங்க

முதன் முறையாக தமிழக மக்கள் ஒருமித்த முறையில் கன்னட வெறியர்களுக்கு எதிரிப்பு தெரிவித்தனர்.

இடையில் எட்டப்பராக நீங்கள் திட்டத்தை கிடப்பில் போட வேண்டிய அவசியமென்ன.?

அன்று காவேரி பிரச்சினையில் தமிழகத்தில் எதிர்ப்பு கூர்மைப்பட்டு வரும்வேளையில் ரஜினி தனித்து உண்ணாவிரதமிருந்து போராட்டத்தின் கூர்மையை மழங்கடித்தார்.

இன்று நீங்களும் அதைத்தான் செய்திருக்கிறீர்கள்.

அந்த ரஜினி கூட இந்த விஷயத்தில் தமிழகத்தின் பக்கமுள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டார்.

ஆனால் ஆறுகோடி மக்களின் பிரதிநிதியான நீங்கள் "பேசிப்ப்பார்க்கலாம்" என்று சொல்லி ஜகா வாங்கிவிட்டீர்கள்.

இப்பிரச்சினையின் ஆரம்பித்தில் வாய்மூடி மெளனம் காத்த செயலலிதா கூட தங்களை தாக்கி பேச வாய்பளித்துள்ளீர்கள்.

என்ன சப்பைகட்டு கட்டப்போகிறீர்கள்.? கர்நாடகத்தமிழர்களின் பாதுகாப்பு கருதி கிடப்பில் போட்டேன் என்று நீலிகண்ணீர் வடிக்காதீர்கள்

எங்கள் நலன் என்ற பெயரில் உங்கள் மக்களை தவிக்க வைக்காதீர்கள்.

வேண்டாம் எங்களை நாங்களே பார்த்துகொள்கிறோம்.எங்களின் தவித்த வாய்க்கு இந்த கர்னாடக அரசு தராளமாகவே தண்ணீர் தருகிறது.


அரவிந்தன்
கர்னாடக தமிழன்