Tuesday, July 31, 2007

"ஐ மிஸ் யூ" -க்கு தமிழில் என்ன

நேற்று இரவு 2.30 மணி இருக்கும்..கைப்பேசியில் ஒரு அழைப்பு.அலுவலகத்தில் வேறொரு துறையில் இருக்கும் ஒரு இளைஞனிடமிருந்து..

எதோ அவரசம் போலிருக்கிறது அதான் இந்த நேரத்தில் அழைப்பு என்ற நினைத்த படியே என்ன விஷயம் என்று கேட்டேன்..

அண்ணே! எனக்கொரு அவரசமா ஒரு உதவி என்றான் என்ன சொல்லுப்பா என்றேன்.என் கேர்ள் பிரண்ட்-க்கு ஒரு ஐ மிஸ் யூ என்பதை தமிழில் எஸ்.எம்.எம் அனுப்ப வேண்டும்.ஐ.மிஸ்.யூ என்பதை எப்படி தமிழில் சொல்வது என்று கேட்டான்..இதுபோன்ற விடயங்களுக்கு நீங்கதான் சரியா ஆளு என்று கம்பெனி-ல பேசிக்கிறாங்க என்று பில்டப் கொடுத்தான்..

"உன்னை பார்க்காம தவியா தவிக்கிறேன்",

"என் தவிப்பு உனக்கு புரியுதா"

நீ இல்லாத தனிமை ரொம்ப வெறுமை"

என் மூன்று சொற்றொடரை சொன்னேன்..

நீங்க என்ன நினைக்கிறீங்க வேறு எதாவது பொருத்தமான வாக்கியம் இருக்கா..?

அன்புடன்
அரவிந்தன்

Monday, July 30, 2007

சன் டிவியில்-இப்பொழுது-உல்லாசப்பறவைகள்-திரைப்படம்

இப்பொழுது சன் டிவியில் உல்லாசப்பறவைகள் திரைப்படம் ஒளிப்பரப்பாகிகொண்டு இருக்கிறது.

கமல்,தீபா,ரதி நடித்தப்படம்.இனிய பாடல்கள்,கண்ணுக்கினிய காட்சிகள் இடம்பெற்ற படம்.முதன் முறையாக பிரான்ஸ் நாட்டில் படம்பிடிக்கப்பட்ட தமிழ் படம் என்று நினைக்கிறேன்...

பார்த்து மகிழுங்கள் நேரமிருப்பின்

அன்புடன்
அரவிந்தன்

சில்லறை வணிகத்திலும் நவீன தொழிற்நுட்பம்!!!

இன்று காலை அருகிலுள்ள மருந்து கடைக்கு சில மருந்துகள் வாங்கச்சென்றேன்.

அபுபொழுது அந்த மருந்து கடையில் ஒரு விற்பனை பிரதிநிதி (மருந்து தயாரிக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்) அந்த கடைக்கு தேவையான மருந்துகள் பற்றிய தேவைகளை தன்னுடைய் PDA-IPAQ- பதிந்து கொண்டிருந்தார். அலுவலகம் சென்றவுடன் அந்த handheld decice-ல் இருந்து அலுவலக க்ணினியில் தரவிறக்கம் செய்துவிடுவதாக சொன்னார்..


தொழில்நுட்பத்தின் தாக்கம் அனைத்து துறைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது..

அன்புடன்
அரவிந்தன்

Wednesday, July 25, 2007

அபூர்வமாக பூத்த பிரம்ம கமலம்

நண்பர்களே!!!



மிக ஆபூர்வமாக பூக்கும் பிரம்ம கமலம். வருடத்தில் சில நாட்கள் நடு இரவினில் பூத்து ஒரு மணி நேரத்திலே வாடி விடும் இந்த பிரம்ம கமலம். சென்ற வாரம் விழித்திருந்து பூக்கும் போது எடுத்த படம்.



அன்புடன்
அரவிந்தன்

Tuesday, July 24, 2007

விஜய் டிவி-நீயா-நானா-சில விளக்கங்கள்

வீ.எம் அவர்கள் எழுதிய நீயா-நானா நிகழ்ச்சிப்பற்றிய பதிவிற்க்கு நான் இட்ட பின்னூட்டம் இங்கே ஒரு பதிவாக

அன்புள்ள வீ.எம்.

14-7-2007 நடந்த நீயா நானா படப்பிடிற்க்கு நானும் சென்றிருந்தேன் பங்கேற்ப்தற்க்காக..

முதலில் அவர்கள் சொன்ன தலைப்புதமிழகத்தில் வசிக்கும் தமிழ்ர்கள் மற்றும் வேற்று மொழி பேசும் மக்கள்..

கடைசி நேரத்தில் என்ன நின்னைத்தார்களோ அந்த தலைப்பு சற்றே பிரச்சினைக்குரிய தலைப்பு அதனால் அந்த தலைப்பில் விவாதம் நடத்துவது இயலாது என்று சொல்லிவிட்டனர்

.பிறகு "பொது இடங்களில் காதலிக்கலாமா கூடாதா என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நாண் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஓலி வாங்கி பெற எந்த வித பிரச்சினை இல்லை.அதுபோல பணம் கொடுத்து யாரும் பேச அழைக்கப்பட்டதாக எனக்கு ரியவில்லை..

நல்ல மரியாதையுடன் நடத்தினார்கள்.இரவு நிகழ்ச்சி முடிந்த போது எல்லோருக்கும் இரவு உணவு,போக்குவரத்து வசதி செய்து கொடுத்தனர்.நிகழ்ச்சியில் இறுதியில் ஒரு பெண் பங்கேற்ப்பாளர் திடீரென மயங்கிவிழுந்த போது கோபி ஓடி வந்து முதலுதவி செய்தது மறக்க முடியாதது..

சில கல்லூரி மாணவ மாணவிகளை அவர்கள் தொடர்ந்து அழைக்கிறார்கள் கூட்டம் சேராததபோது என்று கேள்விப்பட்டேன்..
மற்றபடி விவாதம் மிகவும் நேர்மையாக நடத்தப்பட்டு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டது..

அன்புடன்
அரவிந்தன்.
பெங்களுர்

Friday, July 20, 2007

இயற்க்கை புகைப்பட போட்டிக்கு என்னுடைய புகைப்படங்கள்

இந்த புகைப்படங்கள் கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகில் உள்ள கல்லாத்திகிரி என்ற அருவியில் எடுக்கப்பட்டுள்ளது..




மலையிலிருந்து வேகமாக வந்த காற்றாற்று வெள்ளத்தை அங்குள்ள யாணைகள் தடுத்து நிறுத்தி கல்லாக சமைந்ததாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள்.

















கெம்ங்கண்டி என்ற இடத்தில் எடுத்த மற்றொரு புகைப்படம்
அன்புடன்
அரவிந்தன்


Wednesday, July 18, 2007

பெங்களூர் பதிவர்களே!!!.சென்னைக்கு சேர்ந்துபோய் கும்மியடிப்போம் வாரீகளா

பெங்களூர் பதிவர்களே!!!.

சென்னைக்கு சேர்ந்துபோய் கும்மியடிப்போம் வாரீகளா பெங்களூர் பதிவர்களே!!!,அடுத்த மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் தமிழ் வலைப்பதிவு பட்டறைக்கு ஓன்றாக ரயிலில் சென்று கும்மியடித்துவிட்டு வரலாம்.

ஒன்றாக செல்ல விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொண்டால் ரயிலில் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

அன்புடன்
அரவிந்தன்

Tuesday, July 17, 2007

ஜெயா டி.வி.ரூ 375 கோடி நட்டத்தில்.

நம்பதகுந்த வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல்.

1999-2007 வரை ஜெயா தொலைக்காட்சி தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கி இது வரை ரூ375 கோடி இழப்பினை சந்தித்துள்ளது...

ஆனால் அம்மா இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

தற்போதைய நிலவரப்படி அம்மாவிடம் ரொக்கமாக ரூ 5000 கோடி இருப்பதாக தகவல்.

அன்புடன்
அரவிந்தன்

Monday, July 16, 2007

நான் போட்ட எட்டு..அழைத்மைக்கு நன்றி வணக்கம்..

ஏற்கனவே போட்ட எட்டுதான்..அப்பொழுது தமிழ் மணத்தில் எனது வலைப்பதிவிலிருந்து இடுக்கைகள் திரட்டததாது இப்பொழுதுதான் தெரியவந்தது.அதனால் மீண்டும் பதிப்பிக்கிறேன்.

எற்கனவே படித்தவர்கள் மன்னிக்க.

நான் போட்ட எட்டு..அழைத்மைக்கு நன்றி வணக்கம்..

என்னை எட்டு போட அழைத்த நானானி அவர்களூக்கு முதற்க்கண் நன்றி…என்னடா ஒன்பது வருடங்களாக தமிழியிணையத்தில் இருக்கிறோம்.தொடர்ந்து எழதாவிட்டாலும் அவ்வபோது எழுதிகொண்டுத்தானிருக்க்கிறோமே ஒருத்தரும் நம்மை அழைக்கவில்லையே,வேறு வழியில்லை அழையாவிட்டில் நுழைந்த விருந்தாளி போல நாமே எழுதிவிடலாம் என்றெண்ணியிருந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்து என்னை எட்டு போட அழைத்த நானானி அம்மாவுக்கு மிக்க நன்றி..

1.தமிழ் படிக்க ஆரம்பித்திலிருந்து தமிழ் புத்தகங்கள்(பாட புத்தகங்கள் அல்ல) படிக்கத்துவங்கினேன்..வாசிக்கும் பழக்கம் அப்பாவிடமிருந்து அவ்ந்தது.குறிஞ்சி மலர் புத்தகத்தில் வரும் அரவிந்தன் என்ற கதாபாத்திரம் நினைவாக எனக்கு அரவிந்தன் என்ற பெயர் வைத்ததாக அப்பா சொன்னதால் குறிஞ்சி மலர் புத்தகத்தை இரவெல்லாம் கண் விழித்து படித்தேன்.

2.அரசியல் செய்திகளில் அதீத ஆர்வம் அப்பொழுது..எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் மிக நன்றாக நினைவிருக்கிறது..வானொலியில் செய்திகேட்டவுடன் இந்திரா காந்தி கிழவி ஒழிக என்று வீட்டிற்க்குள் கோஷமிட்டு என் அம்மாவிடம் பூசை வாங்கியது இன்னும் மறக்கவில்லை.

3.எட்டாம் வகுப்பு வரை படிப்பில் மிகவும் சுமார் ரகம்..ஆங்கிலம் என்றால் கசப்பு மருந்துதான் நினைவுக்குவரும்.. ஓன்பதாம் வகுப்பு படிக்குபோதுதான் ஆங்கிலபாடத்தில் முதன்முறையாக 35 மதிப்பென் எடுத்தேன்..அதன்பிறகு ஆங்கிலம் பாடம் மீது தனிக்காதல் வந்து பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் 75 மதிப்பென் எடுத்துபோது எங்கள் வீட்டில் பலர் முதலில் நம்ப மறுத்து மதிப்பென் பட்டியல் பார்க்கவேண்டும் கேட்டது வேறு கதை..

4.ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என் அக்கா பேச்சுப்போட்டிக்காக தந்தை பெரியார் அவர்கள் பற்றிய புத்தகங்களை வாங்கிவந்தார்..பெரியார் பற்றி படிக்க ஆரம்பித்தபின்னர் என்னுள் பல மாற்றங்கள்.கடவுள் மறுப்புகொள்கையை உறுதியாக கடைபிடிக்கத்துவங்கினேன்..எந்த அரசியல் பின்னனி இல்லாத குடும்பமாக இருந்த்தால் என்னுடைய இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சி அளித்தது..ஆனால் என் அப்பா மட்டும் என் முடிவுகளுக்கு என்றும் குறுக்கே நின்றது கிடையாது..இதனிடையில் என் அம்மாவுடன் எற்ப்பட்ட கருத்து வேறுப்பாட்டால்(ஒன்பதாவது படிக்கும் போது) வீட்டில் இருந்து ரூ 100 எடுத்துக்கொண்டு “டில்லி”நகரத்திற்க்கு ரயிலேறிவிட்டேன்.வீட்டில் எழுதிவைத்த கடிதம் மூலம் நான் டில்லிக்குத்தான் சென்றிருக்கவேண்டும் என்று முடிவுசெய்து என் அப்பா உடனடியாக டில்லிக்கு விமானம் மூலம் சென்று டில்லி ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வரும் ஓவ்வொரு வண்டியாக தேடி கடைசியில் நான் டில்லி ரயில் நிலையத்தில் இறங்குப்போதே என்னை கண்டு பிடித்து பத்திரமாக சென்னை கொண்டு வந்து சேர்த்தார்..

5.பிறகு பள்ளி படிப்பு,பொறியியல் படிப்பு என்று வாழ்க்கை எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடத்துவங்கியது..

6.95 வருடம் என் அலுவலகத்தில் கணினி வந்தாலும் 97 வருடம் இணைய தொடர்பு வந்தவுடன் கணினியுடனான என் காதல் தொடங்கியது.என் நண்பர் அருண் என்பவரிடம் சாதரணமாக, இணையத்தில் தமிழை பயன்படுத்தமுடியுமா என்று 98 வருடம் ஆரம்பத்தில் கேட்டேன்.அவர் அப்பொழுது முரசு.காம் என்ற இணையதளத்தினைப்பற்றி சொன்னார்.உடனடியாக முரசு.காம் தளத்திற்க்கு சென்று தமிழ் எழுத்துக்களை இறக்குமதி செய்தேன்.ஆனால் நாங்கள் “ஷெல்” என்ற இணையத்தொடர்பு வைத்திருந்தோம்.அதில் படங்களையோ அல்லது தமிழ் செயலிகளையோ பயன் படுத்தமுடியவில்லை..உடனடியாக அப்பொழுது சென்னை இராதகிருட்டிண் சாலையிலிருந்த நெட் கபேவுக்கு சென்று தமிழை பயன் படுத்தி எழத முயற்ச்சிசெய்தேன்..(அப்பொழுது ஒரு மணி நேர சேவை கட்டணம் ரூ160,இன்று மாத கட்டணம் ரூ250 :)- கணினிதுறையில் இல்லாமல் அனேகமாக சென்னையிலிருந்து தமிழை இணையத்தில் பயன்படுத்திய முதல் நபர் நானகாத்தனிருக்கும்.

7.அப்பொழுதுதான் http://www.tamil.net/ என்ற இணையத்தளமும் அதன் தலைவர் பாலா பிள்ளை அவர்களின் தொடர்பு கிடைத்தது. Tamil.net நடத்திய mailing list மூலம் உலகளாவிய தொடர்பு கிடைத்தது. நான் அனுப்பும் மின்னஞ்சலுக்கு உலகம் மூழுவதிருந்து உடனடியாக பதில் வருவது என்க்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.99-வருடம் என் மகள் பிறந்த செய்தியை தமிழ் இணையத்தில் அறிவித்தபொழுது 50 க்கும் மேற்ப்பட்ட வாழ்த்து செய்திகள் 20 நாட்டிலிருந்து வந்தது..என்னே இணையத்தின் வலிமை..என் மகளிடம் இன்றும் சொல்வேன்..பிறந்த மூன்று மணி நேரத்திலேயே உலகம் மூழுவதிலிருந்து வாழ்த்து செய்தியினை பெற்றவள் நீ என்று..கணினி,இணையம்,மற்றும் தமிழ் மீதிருந்த ஆர்வத்தினாலும் நம்பிக்கையினாலும் நல்ல பங்குதாரர்கள் கிடைத்ததாலும் சொந்தமாக விண்ணூஞ்சல் இண்டிராக்டிவ் என்ற multimedia நிறுவனத்தை தொடங்கினோம் 99 வருட இறுதியில்.

8.என் தனிப்பட்ட வாழ்க்கையில் எற்ப்பட்ட சில பிரச்சினைகளால் என்னால் வியாபாரத்தில் சரிவர கவனம் செலுத்தமுடியவில்லை.மிகத்திறமையான பங்குதாரர்கள் இருப்பினும் என் தவறுகளால் அவர்கள் பாதிக்ககூடாது என்று முடிவு செய்து நிறுவனத்திலிருந்து நாண் விலகிகொள்ள முடிவுசெய்தேன். பிறகு பங்குதாரர்கள் நிறுவத்தை வேறு பெயரில் நல்லப்படியாக வெற்றிகரமாக இன்று நடத்திவருகிறார்கள் என்பது வேறு கதை..உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த “உருப்படதாது” புகழ் நாரயணன் தான் என்னுடை முன்னாள் பங்குதாரர்.

2003 வருடத்தில் மனைவியின் விருப்பத்திற்கேற்ப பெங்களுர் வந்து கால் செண்டர் துறையில் வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை இன்பமாகவும் அமைதியாகவும் சென்றுகொண்டிருக்கிறது..

அன்புடன்
அரவிந்தன்

Sunday, July 08, 2007

நான் போட்ட எட்டு..அழைத்மைக்கு நன்றி

வணக்கம்.. என்னை எட்டு போட அழைத்த நானானி அவர்களூக்கு முதற்க்கண் நன்றி…

என்னடா ஒன்பது வருடங்களாக தமிழியிணையத்தில் இருக்கிறோம்.தொடர்ந்து எழதாவிட்டாலும் அவ்வபோது எழுதிகொண்டுத்தானிருக்க்கிறோமே ஒருத்தரும் நம்மை அழைக்கவில்லையே,வேறு வழியில்லை அழையாவிட்டில் நுழைந்த விருந்தாளி போல நாமே எழுதிவிடலாம் என்றெண்ணியிருந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்து என்னை எட்டு போட அழைத்த நானானி அம்மாவுக்கு மிக்க நன்றி..

1.தமிழ் படிக்க ஆரம்பித்திலிருந்து தமிழ் புத்தகங்கள்(பாட புத்தகங்கள் அல்ல) படிக்கத்துவங்கினேன்..வாசிக்கும் பழக்கம் அப்பாவிடமிருந்து அவ்ந்தது.குறிஞ்சி மலர் புத்தகத்தில் வரும் அரவிந்தன் என்ற கதாபாத்திரம் நினைவாக எனக்கு அரவிந்தன் என்ற பெயர் வைத்ததாக அப்பா சொன்னதால் குறிஞ்சி மலர் புத்தகத்தை இரவெல்லாம் கண் விழித்து படித்தேன்.

2.அரசியல் செய்திகளில் அதீத ஆர்வம் அப்பொழுது..எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் மிக நன்றாக நினைவிருக்கிறது..வானொலியில் செய்திகேட்டவுடன் இந்திரா காந்தி கிழவி ஒழிக என்று வீட்டிற்க்குள் கோஷமிட்டு என் அம்மாவிடம் பூசை வாங்கியது இன்னும் மறக்கவில்லை.

3.எட்டாம் வகுப்பு வரை படிப்பில் மிகவும் சுமார் ரகம்..ஆங்கிலம் என்றால் கசப்பு மருந்துதான் நினைவுக்குவரும்.. ஓன்பதாம் வகுப்பு படிக்குபோதுதான் ஆங்கிலபாடத்தில் முதன்முறையாக 35 மதிப்பென் எடுத்தேன்..அதன்பிறகு ஆங்கிலம் பாடம் மீது தனிக்காதல் வந்து பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் 75 மதிப்பென் எடுத்துபோது எங்கள் வீட்டில் பலர் முதலில் நம்ப மறுத்து மதிப்பென் பட்டியல் பார்க்கவேண்டும் கேட்டது வேறு கதை..

4.ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என் அக்கா பேச்சுப்போட்டிக்காக தந்தை பெரியார் அவர்கள் பற்றிய புத்தகங்களை வாங்கிவந்தார்..பெரியார் பற்றி படிக்க ஆரம்பித்தபின்னர் என்னுள் பல மாற்றங்கள்.கடவுள் மறுப்புகொள்கையை உறுதியாக கடைபிடிக்கத்துவங்கினேன்..

எந்த அரசியல் பின்னனி இல்லாத குடும்பமாக இருந்த்தால் என்னுடைய இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சி அளித்தது..ஆனால் என் அப்பா மட்டும் என் முடிவுகளுக்கு என்றும் குறுக்கே நின்றது கிடையாது..இதனிடையில் என் அம்மாவுடன் எற்ப்பட்ட கருத்து வேறுப்பாட்டால்(ஒன்பதாவது படிக்கும் போது) வீட்டில் இருந்து ரூ 100 எடுத்துக்கொண்டு “டில்லி”நகரத்திற்க்கு ரயிலேறிவிட்டேன்.வீட்டில் எழுதிவைத்த கடிதம் மூலம் நான் டில்லிக்குத்தான் சென்றிருக்கவேண்டும் என்று முடிவுசெய்து என் அப்பா உடனடியாக டில்லிக்கு விமானம் மூலம் சென்று டில்லி ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வரும் ஓவ்வொரு வண்டியாக தேடி கடைசியில் நான் டில்லி ரயில் நிலையத்தில் இறங்குப்போதே என்னை கண்டு பிடித்து பத்திரமாக சென்னை கொண்டு வந்து சேர்த்தார்..

5.பிறகு பள்ளி படிப்பு,பொறியியல் படிப்பு என்று வாழ்க்கை எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடத்துவங்கியது..

6.95 வருடம் என் அலுவலகத்தில் கணினி வந்தாலும் 97 வருடம் இணைய தொடர்பு வந்தவுடன் கணினியுடனான என் காதல் தொடங்கியது.என் நண்பர் அருண் என்பவரிடம் சாதரணமாக, இணையத்தில் தமிழை பயன்படுத்தமுடியுமா என்று 98 வருடம் ஆரம்பத்தில் கேட்டேன்.
அவர் அப்பொழுது முரசு.காம் என்ற இணையதளத்தினைப்பற்றி சொன்னார்.உடனடியாக முரசு.காம் தளத்திற்க்கு சென்று தமிழ் எழுத்துக்களை இறக்குமதி செய்தேன்.ஆனால் நாங்கள் “ஷெல்” என்ற இணையத்தொடர்பு வைத்திருந்தோம்.அதில் படங்களையோ அல்லது தமிழ் செயலிகளையோ பயன் படுத்தமுடியவில்லை..

உடனடியாக அப்பொழுது சென்னை இராதகிருட்டிண் சாலையிலிருந்த நெட் கபேவுக்கு சென்று தமிழை பயன் படுத்தி எழத முயற்ச்சிசெய்தேன்..(அப்பொழுது ஒரு மணி நேர சேவை கட்டணம் ரூ160,இன்று மாத கட்டணம் ரூ250 :)- கணினிதுறையில் இல்லாமல் அனேகமாக சென்னையிலிருந்து தமிழை இணையத்தில் பயன்படுத்திய முதல் நபர் நானகாத்தனிருக்கும்.

7.அப்பொழுதுதான் http://www.tamil.net/ என்ற இணையத்தளமும் அதன் தலைவர் பாலா பிள்ளை அவர்களின் தொடர்பு கிடைத்தது. Tamil.net நடத்திய mailing list மூலம் உலகளாவிய தொடர்பு கிடைத்தது. நான் அனுப்பும் மின்னஞ்சலுக்கு உலகம் மூழுவதிருந்து உடனடியாக பதில் வருவது என்க்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.99-வருடம் என் மகள் பிறந்த செய்தியை தமிழ் இணையத்தில் அறிவித்தபொழுது 50 க்கும் மேற்ப்பட்ட வாழ்த்து செய்திகள் 20 நாட்டிலிருந்து வந்தது..என்னே இணையத்தின் வலிமை..என் மகளிடம் இன்றும் சொல்வேன்..பிறந்த மூன்று மணி நேரத்திலேயே உலகம் மூழுவதிலிருந்து வாழ்த்து செய்தியினை பெற்றவள் நீ என்று..

கணினி,இணையம்,மற்றும் தமிழ் மீதிருந்த ஆர்வத்தினாலும் நம்பிக்கையினாலும் நல்ல பங்குதாரர்கள் கிடைத்ததாலும் சொந்தமாக விண்ணூஞ்சல் இண்டிராக்டிவ் என்ற multimedia நிறுவனத்தை தொடங்கினோம் 99 வருட இறுதியில்.

8.என் தனிப்பட்ட வாழ்க்கையில் எற்ப்பட்ட சில பிரச்சினைகளால் என்னால் வியாபாரத்தில் சரிவர கவனம் செலுத்தமுடியவில்லை.மிகத்திறமையான பங்குதாரர்கள் இருப்பினும் என் தவறுகளால் அவர்கள் பாதிக்ககூடாது என்று முடிவு செய்து நிறுவனத்திலிருந்து நாண் விலகிகொள்ள முடிவுசெய்தேன். பிறகு பங்குதாரர்கள் நிறுவத்தை வேறு பெயரில் நல்லப்படியாக வெற்றிகரமாக இன்று நடத்திவருகிறார்கள் என்பது வேறு கதை..உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த “உருப்படதாது” புகழ் நாரயணன் தான் என்னுடை முன்னாள் பங்குதாரர்.

2003 வருடத்தில் மனைவியின் விருப்பத்திற்கேற்ப பெங்களுர் வந்து கால் செண்டர் துறையில் வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை இன்பமாகவும் அமைதியாகவும் சென்றுகொண்டிருக்கிறது..

அன்புடன்
அரவிந்தன்