Friday, March 21, 2008

பிரபல நடிகர் சோபன் பாபு மரணம்!!!

பிரபல தெலுங்க நடிகர் சோபன் பாபு நேற்று காலை சென்னையில் மாராடைப்பால் மரணமடைந்தார்.

இவருக்கு வயது 73. எராளமான தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக நடிப்புத்துறையிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வந்தார்.

அன்னாரது உடல் தகனம் இன்று சென்னையில் நடக்கிறது.

அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது கண்ணீர் அஞ்சலி

இவர் பிரபல தமிழக அரசியல் புள்ளியுடன் ஒருகாலத்தில் இணைத்து பேசப்பட்டவர்.

விவாகரத்து பெற்ற பின்னரும் நடிகர் இரகுவரன் மரணத்திற்க்கு முன்னாள் மனனவி ரோகினி வந்திருந்தார்.

அதுப்போல் சோபன் பாபுவின் மரணத்திற்கும் அந்த அரசியல் புள்ளி வருவாரா

அரவிந்தன்

Saturday, March 01, 2008

எழுத்தாளர் ஸ்டெல்லா பூருஸ் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி




பிரபல தமிழ் எழுத்தாளர் ஸ்டெல்லா பூருஸ் அவர்கள் இன்று சென்னையில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன் இறந்துபோன மனைவியின் பிரிவு தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

அவர் எழுதிய " அது ஒரு நிலா காலம்" என்ற தொடரின் மூலம் அவர் எழுத்து எனக்கு அறிமுகமாகியது.

நான் வெகுவாக விரும்பி படித்த தொடரது.

எனது கண்ணீர் அஞ்சலி

அரவிந்தன்