Friday, October 19, 2007

என் மகளும் அவளின் தோழிகளும் சேர்ந்து எடுத்த குறும்படம்



படம் பார்த்து உங்கள் கருத்தினை சொல்லுங்கள்.இந்த தசாரா விடுமுறையின் போது எடுத்த படமிது.சாதாரன சோனி டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட நகைச்சுவை படம்

அன்புடன்
அரவிந்தன்

Friday, October 12, 2007

நட்சத்திர பதிவர் வள்ளி-க்கு சில "நச்" கேள்விகள்

நட்சத்திர பதிவர் இ.கா.வள்ளி எழுதிய பெங்களுரில் தமிழர்களின் அலும்பு என்ற பதிவினை படித்தவுடன் பதிவர் வள்ளி-க்கு என்னுடைய கேள்விகளை பின்னூட்டமாக இட்டேன்.இதுவரை அதுப வெளியிடப்படததால் அவற்றை இங்கே வெளியிடுகிறேன்.


//சும்மாவா, இங்க கேள்ளுங்க இவர்களின்

அட்டகாசத்தை. பெங்களூரில் முக்கியமான சாலைகளில்

ஒன்று "ரெசிடென்சி ரோட்" அந்த சாலையில் எழுதப்

பட்டிருப்பது "தனித் தமிழ் சேனை"...//


இதனை யார் எழுதியது என்றும் எனக்கு

தெரியும்.இதிலென்ன தவறு கண்டீர்கள். பெங்களுர்

என்பதால தமிழ் என்ன உலகின் கடைசி மொழியாக

மாறிவிடுமா..உலகின் எந்த விடத்திலும் தமிழே முதன்

மொழி.


//அது மட்டுமா, ஏதாவது விசேஷம் வந்து விடக்

கூடாது, சத்தமாக தமிழ் பாடல்களை வைத்துவிட

வேண்டியது, (ஏதாவது கன்னட பாடல் தமிழில்

ரீ-மிக்சாயிருந்தால் போதும் உடனே காப்பி என்று

கிண்டல் வேறு) அல்லது ஜோகி(பரட்டை தமிழில்) பாட்டை

விட்டால் இவனுங்களுக்கு வேறு பாட்டே கிடைக்காது

என்று நக்கல் விட வேண்டியது.//


தமிழ் வீட்டு விஷேங்களில் தமிழ் பாட்டு போடாமல்

வங்காள,ஒரியா பாட்டா போடுவார்கள்.?


//
கர்நாடகாவில் நல்ல பிரபலமான ஒரு திரைப்பட

நடிகரைக்கூட நம் மக்களுக்குத் தெரியாது,

அவர்களுக்கோ நம்ம ராம்கி வரை எல்லோரையும் தெரியும்.

நம்ம ஆளுங்களா ராஜ்குமாரையே(நடிகர்) யாருன்னு

கேட்பார்கள்., அவர்களுக்கு வரும் பாருங்க கோபம்//


சும்மாயிருங்க வள்ளி,உங்களை மாதிரி இப்ப

வந்தவங்களுக்கு வேண்டுமான ராஜ்குமார் தெரியாமா

இருக்கலாம்.இங்கேயெ இருக்கிற தமிழர்கள்

எல்லோருக்கும் ராஜ்குமார் நல்லா தெரியும்.



//அதுமட்டுமில்லாமல் கன்னடமெல்லாம் தமிழிலிருந்து

தான் வந்தது என்று வேறு கூறிக்கொண்டு

அலையவேண்டியது//

இப்படி சொல்றதுல உங்களுக்கென்ன

கஷ்டம்.உண்மைதானே உங்களுக்கென்ன கசக்குது.

தமிழ் நாட்டில் கூட தமிழ் படிக்காமல் பட்டம் பெற்றுவிடலாம்.இங்கே அப்படி முடியாது.யாரயிருந்தாலும் கன்னடம் படித்தே தீரவேண்டும்.

பெங்களூர் தமிழ்சங்கம் இதுவரை 50,000(ஐம்பாதயிரம்) மேற்ப்பட்டோருக்கு கன்னடம் கற்று தந்திருக்கிறது அது தெரியுமா உங்களுக்கு..

கூந்தல் இருக்கிறவ அள்ளி முடிச்சிக்கிறா இதுல உங்களுகென்ன சலிப்போ தெரியல

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

Tuesday, October 09, 2007

எனக்கு தாலி பிச்சை போடுங்க,முன்னாள் பிரதமரின் மனைவி கதறல்.

நேற்று பெங்களூரில் நடந்த மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டத்தில் நடைப்பெற்ற ஒரு சம்பவம்.

திரு.தேவே கவுடா அவர்கள்,குமாரசாமி, ஆட்சியியை பா.ஜ.க விடம் ஒப்படைத்தால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் கலக்கமடைந்த தேவே கவுடா அவர்களின் மனைவி அக்கட்சியின் எம்.எல்.ஏ க்களிடம் தயுவு செய்து பா.ஜ.கா விற்க்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள்.

அப்படி செய்தால் என் கணவர் தற்கொலை செய்துகொள்வார்.ஆகவே எனக்கு தாலி பிச்சை அளியுங்கள் என்று கதறியதாக தெரிகிறது.

குமாரசாமி அவர்களின் மூத்த சகோதர் ரேவண்ணா,தம்பி நமக்கு நம்ம அப்பாவின் உயிர்தான் முக்கியம் ஆட்சி அல்ல.தயவு செய்து பா.ஜ.கா வுடன் சேராதே என்று குமாராசாமியின் காலில் விழுந்து கெஞ்சியதாக சொல்லப்படுகிறது.

இதன்பிறகு,குமாரசாமி மனம் மாறியதாக சொல்லப்படுகிறது.

அன்புடன்
அரவிந்தன்

Monday, October 08, 2007

தமிழ்.நெட் பாலா பிள்ளை அழைக்கிறார்.சென்னையிலிருந்து!!!

நண்பர்களே,

தமிழியிணையத்தின் முன்னோடி,மடலாற்குழக்களின் முன்னோடி நம் அன்பு பாலா பிள்ளை தற்சமயம் சென்னை வந்துள்ளார்.

வலைப்பதிவர்களை அவர் சந்திக்க ஆவலாக உள்ளார்.

பாலா பிள்ளையை சந்திக்க விரும்பும் பதிவர்கள் அலைப்பேசி மூலம் அவரை தொடர்பு கொள்ளலாம்.

அலைப்பேசி எண்
9940645140

அன்புடன்
அரவிந்தன்

Friday, October 05, 2007

கால்நடைகளை திருடும் சிங்கள இராணுவம்

தமிழீழத்தின் கிழக்குபகுதியில் உள்ள பட்டிகோலா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த சிங்கள இராணுவத்தின் தாக்குதலால் எழை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாரிய அளவில் இடம் பெயர்ந்துள்ளனர்.

வீடுகளை விட்டு வெளியேறும் போது தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

அந்த கால்நடைகளை சிங்கள காவல்துறையினர்,இராணுத்துறையினர்,மற்றும் சிங்கள ரவுடிகள் கூட்டம் தமிழர்களின் வீட்டிலிருந்து திருட்டுத்தனமாக ஓட்டிச்சென்று சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் விற்பனை செய்கிறார்கள்.

திருந்துமா இந்த திருட்டுக்கூட்டம்.?

அரவிந்தன்

Tuesday, October 02, 2007

"சேது சமுத்திரம்"உருப்படாதது நாரயணுக்கு சில"நச்"கேள்விகள்!!!

//இப்போது சென்னையில் பந்த் [திமுகவின் பாஷையில் ஸ்ட்ரெக்] ஒரு வேலையும் நடக்காமல், வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு என்.டி.டி.வி ப்ராபிட் பார்த்துக் கொண்டிருக்கிறேன்//

போராட்டத்திற்க்கு தார்மீக அதரவு கொடுத்து வீட்டில் இருந்த உங்களுக்கு நன்றி

//இது போக, அம்பிகா சோனிக்கு கீழ் வரும் தொல்பொருள் ஆராய்ச்சி துறை, எடுத்தேன் கவிழ்தேன் என்று, ராமர் இருந்ததை நிரூபிக்க முடியாது என்று சொல்லப் போக, பழம் நழுவி,பால்,வாய்//

இல்லாத கற்பனை கதாபாத்திரத்தை இல்லை என்று சொல்ல ஏன் தயங்க வேண்டும்.?//ஜல்லி No.1: பி.ஜே.பி நாக்கை வெட்டுவேன், கழுத்தை அறுப்பேன் என்று பேசிய வேந்தாந்தியினை கண்டித்திருக்கிறது. உங்களால், அதைப் போல, தமிழகத்தில் கருணாநிதியினை கண்டிக்க முடியுமா ?//

கண்டிக்க வேண்டிய அளவிற்க்கு அவர் என்ன சொன்னார்.தர்க்க ரீதியாக கேள்வி கேட்டார் அது தவறா..தர்க்க ரீதியாக கேள்வி கேட்பதும்,தலையை கொய்து வர சொல்வது ஒன்றா எந்த ஊர் நியாயம் நாரயண் இது..?1

950- முதலியார் குழு கொடுத்த அறிக்கையில் இது 9 கோடியில் முடிக்ககூடிய லாபம் தரும் திட்டம் என்று சொல்லபட்டுள்ளேதே அது தெரியுமா.இந்திய அரசாங்கத்தின் NEERI என்ற சுற்றுப்புற சுழல் அமைப்பு இத்திட்டத்திற்க்கு பச்சை கொடி காட்டியுள்ளேதே பார்க்கவில்லையா அல்லது பார்க்க மனமில்லையா

//சேது சமுத்திர திட்ட வரைவின் படி, 30000 டன்னிற்கு மேலான கப்பல்கள் இக்கால்வாயில் பயணிக்க முடியாது.//

ஏன் 30 ஆயிரம் டன் சுமக்கும் கப்பல்களே இவ்வுலகில் இல்லையா எராளமான உள்ளூர் கப்பல்கள் 30 ஆயிரம் டன் மட்டுமே சுமக்கும் திறன் கொண்டவை.

//ஜல்லி No.2: இதற்கு முன் சுற்றுச்சூழல் பாதிப்புகளே இல்லாமல்திட்டங்கள் இந்தியாவில் நிறைவேறி இருக்கிறதா ? தமிழினம், கலைஞர் என்று வந்தால் மட்டும் எதற்கு பாரபட்சம் பார்க்கிறீர்கள். நர்மதா சரோவர் திட்டத்தில் ஆகாதபாதிப்பா, சேது சமுத்திரத்தில் வரப் போகிறது ?//

எந்தவித வளர்ச்சி திட்டத்திலும் சில சுற்றுபுற சீர்கேடுகள் இருக்கத்தான் செய்யும்.அது எந்த அளவிற்க்கு நம்மை பாதிக்கச்செய்யும் என்று பார்க்கவேண்டும்.மீன் கிடைக்கவில்லையென்று இலங்கை கடற்பகுதிக்கு சென்று மீன் பிடித்துவிட்டு குண்டடிப்பட்டு சாவுறான் தமிழன் இந்த லட்சனத்தில மீன் இனம் பாதிக்குதுன்னு நீங்க சொல்றிங்க.

ஒரு வளர்ச்சி திட்டத்தை இல்லாத கடவுளின் பெயரால் முட்டுக்கட்டை போடும் போது அந்த கடவுளை கேலி செய்வதில் என்ன தவறு.

பரதேசி கட்சியினர் சுற்றுப்புறசுழல் பாதிப்பு பற்றி மட்டும் பேசியிருந்தால் கலைஞர் ஏன் ராமனைப்பற்றி பேசியிருக்கபோகிறார்.

ராமன் பெயரால் முட்டுக்கட்டைபோட நினனைக்கும் போது அந்த ராமனை முச்சந்தியில் நிறுத்தி விமர்சனம் செய்வதில் என்ன தவறு.

பரதேசி கட்சியினரை "சேது சமுத்திரம் " திட்டத்தில் உள்ள பொருளாதார,சுற்றுப்புற சூழல் பற்றி மட்டும் பேச சொல்லுங்கள். அதன்பிறகு நாங்கள் ஏன் ராமரைப்பற்றி பேச போகிறோம்.?

கலைஞர் புட்டபர்த்தியை பாராட்டினார் ஆம் உண்மைதான் அதே பாபா எதாவது மக்கள் நல திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அவரை முதலில் கலாய்ப்பது நாங்கள்தான்.

//நாராயணன் இந்துக்களைப் பற்றி பேசி, தன்னுடைய அடிப்படை நிறத்தினை நிறுபிக்கிறான் என்று இந்த பதிவினை நீங்கள் மொத்தமாக திசை திருப்பலாம்//


இது வரை நாங்கள் அப்படி நினைக்கவில்லை. இப்படியும் திசை திருப்பலாம் என்று நீங்கள் சொன்னதற்க்கு நன்றி.

தொடக்கத்திலிருந்தே திசை திருப்பல் பற்றி நீங்கள்தான் பேசிவருகிறீர்கள்.ஆக உங்கள் உள் மனது திசை திருப்பலை விரும்புகிறது.

மெல்ல பூனை பையிலிருந்து வெளி வரத் ஆரம்பித்திருக்கீறது.

அன்புடன்
அரவிந்தன்

Monday, October 01, 2007

எப்பத்தான் மாறுவீங்க நீங்க எல்லாம்.?

மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத உச்ச நீதிமன்றம்.

.மக்கள் தங்களின் உணர்வுகளை அறவழியில் வெளிபடுத்தியும் அதனை கிண்டல் செய்யும் இட்லி வடைகள்.(ஒரு இடத்திலாவது தி,மு.க தொண்டர்கள் வலுக்கட்டாயமாக கடைகளை மூடச்சொன்னதாக சொல்லமுடியுமா)

பொருளாதார வளம் தரும் திட்டங்களை இல்லாத ராமன் பெயரில் தடைப்போட நினைக்கும் பரதேசி கட்சிகள்..

வருடகனக்கில் காவேரி,முல்லை பெரியாறு பிரச்சினைக்கு நிரந்த முடிவு சொல்லாத ---நீதிமன்றம்., சொன்ன தீர்ப்பை அமல்படுத்தாத கர்நாடக அரசினை கலைக்க சொல்ல தைரியம் இல்லாத ....நீதிமன்றம்

12 வருடங்களாக இழத்தடிக்கும் ஜெயலலிதான மீதான அன்னிய செலவாணி வழக்கை இன்னும் முடிக்காம இருக்கும் ....நீதிமன்றம்.

எப்பத்தான் மாறுவீங்க நீங்க எல்லாம்

அன்புடன்
அரவிந்தன்