Sunday, March 28, 2004

பொதுவாக கால் சென்டர்களில் வேலைசெய்பவ்ருக்கு வெளியே இருந்து வரும் தனிப்பட்ட தொலைப்பேசி அழைப்புகளை கொடுக்கமாட்டார்கள்...வேலை கெட்டுவிடும் என்பதால்..

அதனால் பெரும்பான்மையினர் தங்கள் உபயோகத்திற்க்கு அலைப்பேசியைத்தான் பயன்படுத்துபர்..
அதுக்கூட வேலைநேரத்தில் பயன்படுத்த அனுமதியில்லை...இடைவேளைகளில் பயன்படுத்த அனுமதியுண்டு..
ஆனால் நம்மக்கள் கில்லாடிகள்...தங்கள் அலைபேசியினை சட்டைப்பைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு தொலைபேசியில் வாடிக்கையாளோரோடு பேசுவதுபோல பேசிக்கொண்டு இருப்பார்கள்...

ஆனால் ஒன்றும் மட்டும் எனக்கு புரியவில்லை..விடியற்காலை 4 மணிக்கு அப்படி யாரிடம்தான் பேசுவார்களோ
எங்களைப்போன்ற பெருசுகளுக்கு இது புரியாத புதிர்...

தொடரும்...
கால் சென்டர் என்பது ஒரு வித்தியாசமான இந்தியா இதுவரை சந்திராத புதிய இயங்குமுறை கொண்டு செயல்படும் இடம்..

எல்லாவிதமான உடைகளும் அணியலாம்..எல்லாவயதினரும் வேலை செய்யலாம்...கல்வித்தகுதி பள்ளியிருதி படிப்பு இருந்தாலே போதுமானது....ஆங்கிலம் பேச மட்டும் தெரிந்தாலே போது...கணினி கையாளத் தெரிந்தால் அதுமிக பெரிய தகுதியாகத் கருத்தப்படும்...

கைநிறைய சம்பளம் என்று சொல்லாவிட்டாலும் நல்ல சம்பளம்தான்...18 வயதினரும் 50 வயதினரும் ஒரே வேலையை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வார்கள்...

சில நேரத்தில் வாழ்ந்துகெட்ட சில பெருசுகள் வேலைக்கு வந்து இந்த சின்ன பையன்களிடம் கதை அளந்து கொண்டு இருக்கும்...
தொடரும்...

Tuesday, March 23, 2004

வாழ்க்கை ஓட்டத்தில் அடிப்பட்டு மிதிப்பட்டு ஒரு அழைப்பு மையத்தில் அதாஙக கால் சென்டரில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு கால் பாய் யின் கதை......
வணக்கம்
New Test message