Wednesday, December 31, 2008

வலையுலக் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

வலையுலக் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

2008 வருடம் அதிகப்படியான மகிழ்ச்சியுடனும்,நல்ல பொருள் வளத்துடனும் இருந்தது.எதிர்வரும் வருடமும் இதேப்போல் இன்பம் பொங்கி வழியும் என்றும் நம்பிக்கையுடன்
இருக்கிறேன்.

நம் வலையுலக நண்பர்கள் அனைவரும் 2009 வருடத்தில் எல்லா வளங்களையும் பெற்று மென்மேலும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

36-மைல் தொலைவில் உள்ள தமிழீழத்தில் 2009 வருடத்தில் தமிழ்மக்கள் சுதந்திர காற்றினை சுவாசிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் 2009 வருடத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறின்றேன்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

Saturday, November 29, 2008

இன்றாவது விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சியினை பார்க்க அனுமதிப்பீர்களா.??

புதன் இரவு 12.30 மணியிலிருந்து தொடர்ந்து சனிக்கிழமை காலை 11.30 வரை எறத்தாழ 44 மணி நேரம் தொடர்ந்து தொலைகாட்சியில் மூழ்கிவிட்டேன்.


மகள் பார்க்க ஆசைப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியினைகூட பார்க்க அனுமதிக்காகமல் செய்தி தொலைகாட்சிகளை பார்த்து கொண்டிருந்தேன். இன்றாவது விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சியினை பார்க்க அனுமதிப்பீர்களா என்று மகள் கேட்ட போது மும்பையில் எல்லாமே முடிந்துவிட்டிருந்து. :(-

இப்படி தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்ததால் என் மகள் தெரிந்து கொண்ட (தேவையே இல்லாத) விஷயங்கள்

ஏ.கே 47,வெடிக்குண்டு,5 நட்சத்திர விடுதி அமைப்புகள்,அறை வாடகை,பாகிஸ்தான் தீவிரவாதம்,முஸ்லீம் தீவிரவாதம்,நெரிசல் மிகுந்த மும்பை வாழ்க்கை,கருப்பு பூனைப்படை,காமாண்டோ படை

என்னுடை செயலால் தேவையில்லாத விஷயங்களை என் மகள் மீது திணித்து விட்டேனோ என்று மனசாட்சி உறுத்துகிறது

மரத்துப்போன மனசு..என்ன செய்வதென்று தெரியாமல் அலுவலகம் நோக்கி காலார நடந்து வந்துவிட்டேன் :(-

Monday, November 03, 2008

இந்தியாவிலுள்ள ஏதிலிகள் முகாம் ஒரு பார்வை

இந்தியாவில் திபெத்திய ஏதிலிகள் மற்றும் ஈழத்தமிழ் ஏதிலிகள் பலர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு செய்யும் உதவி(?)களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

கர்நாடகாவிலுள்ள திபெத்திய ஏதிலிகள் முகாம்:

திபெத்திய ஏதிலிகள்

ஏதிலிகள் எண்ணிக்கை
ஒரு முகாம் (22 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
5,232 ஏதிலிகள் உள்ளனர்.

வாழ்விடம்

தாங்கள் விரும்பியது போல் வீடுகளைக் கட்டிக் கொள்ளுவதற்கு அனுமதி (அனைத்தும் மாடி வீடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரப்படி கட்டப்பட்ட ஓட்டு வீடுகள்).

சுகாதார வசதி

தனியாக ஒவ்வொரு பகுதிக்கும் திபெத்தியர்களுக்கு தரமான, நவீன வசதிகளுடன் தனி மருத்துவமனை (5 மருத்துவர்கள், 15 செவியர்களுடன் இயக்கப்படுகிறது)
அவர்கள் தாங்களே வடிவமைத்துக் கொண்ட கழிப்பறை, குளியலறை

கலாச்சாரம்

ஆனால் திபெத்திய ஏதிலிகளுக்கோ தங்கள் புத்தமத கலாச்சாரத்தின்படி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவும், உடைகள் அணியவும், வீடுகளைக் கட்டிக் கொள்ளவும், தங்கள் மொழியை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றது. (நாங்கள் அங்கு சென்று பார்த்த போது அது குட்டி திபெத் போல் தெரிந்தது)

மத சுதந்திரம்

தனியாக நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட புத்த கோயில் மற்றும் தலாய்லாமா கோயில்கள் (சுமார் பரப்பளவு 1 ஏக்கர் நிலத்தில்)
தனியாக சுமார் ஐம்பது மாணவர் படிக்கக்கூடிய மதப்பள்ளி ஒன்றும்,
அதே போல் மதக் கல்லூரி ஒன்றும்,
தனித்தனியான மாணவர் விடுதிகள் உள்பட

கல்வி

சகல வசதிகளுடன் CBSC பாடத் திட்டத்தில் - தில்லி அரசாங்கத்தின் அனுமதி பெற்ற. திபெத்திய ஏதிலிக் குழந்தைகளுக்கு மட்டுமான பள்ளி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது பத்தாம் வகுப்பு வரை மட்டும்.
பின் 11, 12 படிக்க அரசே உதவி செய்து சிம்லா அனுப்பி வைக்கிறது. (அனைத்து செலவுகளையும் ஏற்று)
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க முறையே 3, 5 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. (அரசு செலவுடன்)
திபெத்தியர்கள் தங்கள் உயர்கல்வியை தொடர கர்நாடகத்தில் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் அகதிகள் என்ற முத்திரையுடன்.

விவசாய நிலம்

மொத்தமாக இருக்கக்கூடிய மக்கள் தொகையில் 5232 பேர்களுக்கு பண்படுத்தப்பட்ட, நீர் வசதியுடன் விவசாயம் செய்யத்தக்க 3,500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு

தனியாக இணையவசதி இலவசமாக வழங்கப் படுகிறது.
22 பகுதிகளுக்கும் தனித்தனியாக செல்போன் டவர்கள் உள்ள தொலைபேசி வசதிகள்.

வங்கி

மொத்தம் நான்கு வகையான வங்கிகள்
சிண்டிகேட் வங்கி
ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்
கூட்டுறவு வங்கி
வெளிநாட்டு பணம் பெற்றுக் கொள்ள Western Union Money Transfer

தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்

சுயமாக பால்பண்ணை வைக்க, பொருட்கள் உற்பத்தி பண்ணை, கடை வைத்துக் கொள்ள அரசே வட்டி மற்றும் நிபந்தனை இல்லாமல் கடன் வழங்குகிறது.
அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளியில் சென்று விற்கவும், கடையில் சென்று விற்கவும் அனுமதிக்கப்படுகிறது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக (பணிமனை) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பண உதவி மற்றும் பொருளுதவி

குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் வழங்கப்படுகிறது.

ஆய்வு

திபெத்திய ஏதிலிகளுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்காக அமைக்கப்பட்ட அதிகாரி மாதமொருமுறை மைய அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார். மற்றபடி முழு சுதந்திரமாக உள்ளனர்.

திபெத்திய ஏதிலிகளுக்கு உள்ள மற்ற சிறப்பியல்புகள்

இளைஞர்களுக்கு தனியாக அமைக்கப்பட்ட Youth Congress
மக்கள் ஒன்றாக கூடுவதற்கு Multipurpose Hall.
அவர்கள் நாட்டில் இருந்து வருபவர்களை தங்கவைக்க அரசு ஓய்வு விடுதி
அவர்கள் விரும்பும் இடத்தில் மதவழிபாட்டுத் தலங்கள்.
வெளியில் சென்று தொழில் தொடங்க வசதி.
கர்நாடக மக்களுடன் இயல்பாக கலந்து கொள்ள அனுமதி. (ஆனால் ஈழ அகதிகள் அனுமதிக்கப்படுவதில்லை) ஆகியவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் ஏதிலிகள்
ஈழத்தமிழ் ஏதிலிகள்

ஏதிலிகள் எண்ணிக்கை
மொத்தம் 103 முகாம்கள் உள்ளன.
ஏழத்தாழ 75,000க்கும் மேல உள்ளனர்.
(தினந்தோறும் தங்கள் உடைமைகளை இழந்து உயிரை மட்டும் கொண்டு நூற்றுக்கணக்கான பேர் வந்து கொண்டு இருக்கின்றனர்).

வாழ்விடம்

அரசாங்கங்கள் கட்டிக் கொடுக்கும் குடிசைகள் மற்றும் ஈழ அகதிகள் தாங்களாக கட்டிக் கொள்ளும் குடிசைகள்.
90% வீடுகளில் மின்சாரமே இல்லை.
பெரும்பாலும் மேற்கூரை சரியாக இல்லாத வீடுகள் அதிகமாக உள்ளன.

சுகாதார வசதி

அருகில் உள்ள பொது மருத்துவமனைகளில் உடல் நலம் பாதிக்கப்படும் பொழுது, முகாம் பாதுகாவலர் அனுமதி பெற்று பார்த்துக் கொள்ளலாம்.
பாதி முகாம்களில் கழிப்பிட வசதி இல்லை. ஒரு சில முகாம்களில் இடிந்து போய் பராமரிப்பு அற்று நாய்களும், பன்றிகளும் (மனிதன் போக தகுதியற்ற) மலம் கழிக்கக்கூடிய கழிப்பறை, எதற்கும் மேற்கூரை கிடையாது. திறந்த வெளி கழிப்பிடம்.
பெண்கள் குளிப்பதற்கு நான்கு பக்கமும் ஓலைகளால் வேயப்பட்ட குளியலறை.

கலாச்சாரம்

அனைத்து உரிமைகளும் ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது. பொதுவாக ஈழத்தில் உள்ள பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது வழக்கம். அதனை இங்குள்ள காவல் துறையினர் மற்றும் ஊழியர்கள் நீங்கள் ஆபாசத்தை தூண்டுகின்றீர்கள் என்ற பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கின்றனர்.

மத சுதந்திரம்

மனித உரிமையே இல்லாத இடத்தில் மத சுதந்திரம் எதிர்பார்த்தது எங்கள் அறியாமையே.

கல்வி

அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஈழக் குழந்தைகள் 1 முதல் +2 வகுப்பு வரை சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். (ஆனால் மண்டபம் பள்ளியில் நேரடியாக +1 மற்றும் +2 வகுப்புகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை. அதற்கு பள்ளி நிர்வாகம் சொல்லும் காரணம் என்னவெனில் +2 வகுப்பு தேர்வு முடிவுகள் பாதிக்கப்படும் என அச்சம் கொள்வதாக சொல்கிறது. மண்டபம் பள்ளியின் தற்போதைய நிலை என்னவெனில் மொத்தம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 129 மேல்நிலைப் பள்ளிகளில் தர நிலையில் 128வது இடத்தில் உள்ளது.

ஒருசில ஈழ முகாம்களில் 1 முதல் 5 வரையான வகுப்புகள் உள்ள பள்ளிகள் உள்ளன. அங்கு ஆசிரியர்களாக ஏதிலிகளால் நியமிக்கப்பட்ட ஏதிலிகள் முகாம்களில் உள்ள படித்த அதிகபட்சமாக இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.
பள்ளிக் கட்டிடம் பெரும்பாலும் பாழடைந்து ஓட்டை உடைசலாகத் தான் உள்ளது.
உயர்கல்வியில் 2003 வரை இருந்த இட ஒதுக்கீடு நீக்கப்பட்டதால். உயர்கல்வி முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது (வசதி உள்ளவர்கள் தனியார் கல்லூரிகளில் படிக்க அனுமதியுண்டாம். நம் நாட்டின் தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் எவ்வளவு என்று நமக்கே தெரியும்)

விவசாய நிலம்

குடியிருக்க இடம் கொடுக்காத நாட்டில் விவசாய நிலம் கேட்பது நம் முட்டாள்தனம் தான்.

தகவல் தொடர்பு

நாட்டுப் பிரச்சனைகள் பேசினால் தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் சூழ்நிலையில் மற்ற முகாம்களில் இருக்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள STD Booth-களையும், 1 ரூபாய் நாணயப் பெட்டியையும் பயன்படுத்துகின்றனர். அனால் இதற்கு முகாம் காப்பாளரின் அனுமதி வேண்டும்.

தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்

மண்டபம் முகாமில் மூன்று நாள் மட்டும் வெளியே சென்று கூலி வேலை பார்க்க அனுமதி.
மற்ற முகாம்களில் அருகிலுள்ள ஊர்களில் சென்று வண்ணமடித்தல், கல்லுடைத்தல், விவசாயத்தில் கூலி வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
கடுமையான நிபந்தனையுடன்.
பண உதவி மற்றும் பொருளுதவி

குடும்பத் தலைவருக்கு ரூ. 72, பெண்ணுக்கு ரூ.50 மற்ற உறுப்பினருக்கு ரூ.45 சிறு குழந்தைகளுக்கு ரூ.12.50. 15 நாளுக்கு ஒருமுறை வழக்கப்படுகின்றது.

ஆய்வு

மண்டபம் முகாம்களில் அறிவிக்கப்படாத தினம்தோறும் ஆய்வும் மற்ற முகாம்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு நடைபெறுகிறது.
ஆய்வின் போது தங்கள் சொந்த மண்ணைப் பற்றி (ஈழம்) பேசினால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.தன் நாட்டை விட்டு இங்கு வரும் ஏதிலிகளிடம் மூன்று நாட்கள் மண்டபம் முகாமில் உள்ள தனி சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொள்கிறார்களா என்ற சந்தேகத்துடன் அவ்வாறு சோதனை செய்யும் போது சற்று வாட்டசாட்டமான இளைஞர்கள் கோபப்பட்டால் அவர்களை உடனேயே செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கின்றனர்.செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்பது அறிவிக்கப்படாத ஒரு சிறை சித்திரவதைக்கூடம். இந்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து பார்ப்பதை விட்டுவிட்டு திபெத்திய ஏதிலிகளைப் போல் தமிழர்களை பார்க்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் ஏதிலிகளாக வரும் தமிழர்களை மனிதர்களாகவாவது பாவித்து, வாழ்வுரிமையை பாதிக்காத அளவு வாழ்வதற்கான உத்தரவாததினை அளிக்க வேண்டும்.
மேற்கண்டவைகள் அனைத்தும் நாம் தமிழகத்தில் காணலாம்.

இதில் திபெத்தியர்களை விட ஈழத்தமிழர்கள்தான் அந்தியசெலவாணி வரவினை அரசுக்கு ஈட்டிக்கொடுக்கின்றனர். திருட்டு VCD காரணமாக திரைப்படத்தொழில் மூழ்கும் அபாயம் இருந்த பொழுது அதை தூக்கி நிறுத்தியவர்கள் ஈழத்தமிழர்கள்தான். இந்தியாவைத்தவிர்த்து மற்ற நாடுகளுக்கு ஏதிலியாக சென்ற ஈழத்தமிழர்களை மற்ற நாடுகள் தன் நாட்டு குடிமகன் போல் மதித்து தனது அரசு பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளார்கள். ஆனால் இந்திய அரசு ஈழத்தமிழர்களை மனிதர்களாகக்கூட நினைக்கமறுக்கிறார்கள்.

சிங்களவர்களின் பூர்வீகம் இந்தியா என்பதாலா? ஒரிசா மற்றும் வங்காள தேசத்தை தாயகமாக கொண்டவர்கள்தான் சிங்களவர்கள் என்பதால்தானா இந்திய அரசு தமிழர்களை மனிதர்களாக பார்க்க மறுப்பது. இலங்கை என்பது தமிழர்களின் தாயகம்சிங்களவர்கள் இந்தியாவைச்சேர்ந்த வந்தேறிகள் என்பதால்தானா?

உண்மை வெல்லும் ஒரு நாள் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கும் விரைவில்.

நன்றி:-தமிழ்விண் இணையம்
http://www.tamilwin.com/view.php?20IWnp20e1j0A2ebiG7X3bdF9EY4dc82h2cc41pO2d43oQH3b02PLI3e

Wednesday, October 08, 2008

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் கருணா!!!

அன்பின் கருணா,

என்ன சாதித்தாய்... ஒரு மாபெரும் விடுதலை போராட்டத்தை காட்டி கொடுத்து என்ன சாதித்தாய்..

தமிழிழ புதிய விடுதலை புலிகள் என்று ஒரு அமைப்பினை தொடங்கினாய..இலங்கை இராணுவத்துடன் சேர்ந்துகொண்டு விடுதலை புலிகளை எதிர்த்து போராடினாய்..உன்னால் கிழக்கு பகுதியில் சிங்கள குடியேற்றம் பெருமளவில் நடந்தது.

லண்டனுக்கு போலி கடவுச்சீட்டில் பயணம் செய்தாய்...ஆறு மாதம் லண்டன் சிறை வாசம்..

நீ செய்த எட்டப்பன் வேலை உனக்கு கிடைத்தது என்ன ஒரு எம்.பி பதவி...கேவலம் இந்த பதவிக்காக ஒரு மாபெரும் விடுதலை போராட்டத்தை பின்ண்டைய செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது..உன்னையே நம்பி வந்த இளைஞர்கள் இன்று அரபு நாடுகளில் கூலி வேலை செய்ய நீ மட்டும் கொழம்பு நகரில் ஆடம்பரமாக வாழ்கிறாய்..

எத்துனையோ எட்டப்பன்களை தமிழீழ விடுதலை போராட்டம் பார்த்துவிட்டது.

அதில் நீயும் ஒன்று....

Monday, August 25, 2008

”அந்த ஐந்து நிமிடங்கள்” குறும்படம்!



சமீபத்தில் 1993 வருடம் எடுக்கப்பட்ட குறும்படம்.

சில முறை சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.

”ஸ்நேகா” என்ற தொண்டு அமைப்பின் பாராட்டைப்பெற்ற குறும்படம்.

சில வருடங்களுக்கும் முன் தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஓளிபரப்ப முயற்சி செய்தேன்.வாய்ப்பு கிடைக்கவில்லை.

படம் பார்த்து உங்கள் கருத்தினை சொல்லவும்.

அன்புடன்
அரவிந்தன்

Wednesday, July 30, 2008

பெங்களூர் சில துக்கடாக்கள்!!!

பெங்களூரில் தமிழ் பட சிடிக்கள் கொள்ளை மலிவு விலையில் கிடைக்கின்றன.

பெங்களூரில் பூங்காக்களில் காதலர்கள் சுதந்திரமாக காதலிக்கமுடிகின்றது

நியாயமான கட்டணத்தில் பெங்களூரில் ஆட்டோவில் பயணிக்கமுடிகிறது.

சென்னைப்போல் அல்லாமல் ரூ100க்கு கட்டணசேனல் மற்றும் அனைத்து இலவச சேனல்களும் பார்க்கமுடிகீன்றது.
பெங்களூரில் இன்னும் கீத்து கொட்டாய் திரையரங்கு செயல்படுகிறது.

பெங்களூரில் 5500 மாத வாடகையில் தனி வீடு கிடைக்கிறது

பெங்களூரில் இன்னும் 18ரூபாய்க்கு நல்ல அளவு சாப்பாடு கிடைக்கிறது

Saturday, July 26, 2008

ஆகமதாமாத் நகரில் தொடர் குண்டு வெடிப்பு

ஆகமதாபாத் நகரில் தொடர் குண்டு வெடிப்பு..

13 இடங்களில் குண்டு வெடிப்பு..நால்வர் மரணம்..
ஆகமதாபாத் நகரில் தமிழ்ர்கள் பெரு வாரியாக வசிக்கும் "மணி நகர்" பகுதியில் இரண்டு இடத்தில் குண்டு வெடித்தது,

மிதிவண்டியிலும், டிப்பின் பெட்டியிலும் வெடிகுண்டுகள் வைத்து வெடிக்கச்செய்துள்ளனர்

அரவிந்தன்

Tuesday, July 22, 2008

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி!!!

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி!!!

ஆதரவு--275

எதிர்ப்பு-256

அன்புடன்
அரவிந்தன்

Monday, June 23, 2008

யாரிடம் சொல்லி அழ

அன்பு நண்பர்களே,

எனது மனைவி கடுமையான மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவு காரணமாக சென்ற வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த பதினோரு வருட திருமண வாழ்க்கையில் முதன்முறையாக மருத்துவமனை வாசம்.

தற்பொழுது மருத்துவமனை சிகிச்சை முடிந்து ,வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்.

மஞ்சள் காமாலையின் வீரியம் சிறிதே குறைந்துள்ளது.கடுமையான பத்திய சாப்பாடும்,நல்ல ஒய்வும்தான் விரைவில் நோயின் கடுமை குறைய எதுவாகவுள்ளது.

மஞ்சள் காமாலையின் தாக்கத்தால் எடை குறைந்து மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார்.

பல வருடங்களுக்கு பிறகு வீட்டில் வெறுமை..தனிமை மிகவும் வாட்டி வதைக்கிறது.(மனைவி தற்சமயம் அவங்க அம்மா வீட்டில் ஒய்வு எடுக்கிறார்).

வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் நீக்கமற நிறைந்திருந்த அவளை ,தற்சமயம் பார்க்க முடியாமல் நான் படும் வேதனையை யாரிடம் சொல்லி அழ

நாற்பது வயதினை நெருங்கும் ஒரு ஆண் மகன் தன்னுடைய இந்த வேதனைய யாரிடம் பகிர்ந்துகொள்ள முடியும்.?

அரவிந்தன்

Friday, May 30, 2008

வழக்கொழிந்துபோன தமிழ் பதிவுலக வார்த்தைகள் சில!!!

1.கும்மி/கும்மியடித்தல்
2.மொக்கை பதிவு
3.போலி
4.மூத்த பதிவர்
5.திராவிட திம்மி
6.பாக்டீரியா குஞ்சு
7.மூர்த்தி
8.கொண்டை


வேறு ஏதாவது விடுப்பட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்

அன்புடன்
அரவிந்தன்

Sunday, April 06, 2008

அய்யா கலைஞர் அவர்களுக்கு ஒரு கேள்வி..???

அய்யா கலைஞர் அவர்களே!!!

இந்த ஒகனேக்கல் குடிநீர் திட்டத்திற்க்கு சென்ற மாதம் நீங்கள் அடிக்கல் நாட்டும் போது கர்நாடகாவில் என்ன ஜனநாயக ஆட்சியா நடந்து கொண்டிருந்து.

இப்போது மட்டும் என்ன மாற்றம் .மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சி வரட்டும் பேசி தீர்த்து கொள்ளலாம் என்று திடீர் பல்டி..?

எதன் அடிப்படையில் "நீங்கள் பேச்சு வார்த்தை" நடத்த போறிங்க சொல்லுங்க

முதன் முறையாக தமிழக மக்கள் ஒருமித்த முறையில் கன்னட வெறியர்களுக்கு எதிரிப்பு தெரிவித்தனர்.

இடையில் எட்டப்பராக நீங்கள் திட்டத்தை கிடப்பில் போட வேண்டிய அவசியமென்ன.?

அன்று காவேரி பிரச்சினையில் தமிழகத்தில் எதிர்ப்பு கூர்மைப்பட்டு வரும்வேளையில் ரஜினி தனித்து உண்ணாவிரதமிருந்து போராட்டத்தின் கூர்மையை மழங்கடித்தார்.

இன்று நீங்களும் அதைத்தான் செய்திருக்கிறீர்கள்.

அந்த ரஜினி கூட இந்த விஷயத்தில் தமிழகத்தின் பக்கமுள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டார்.

ஆனால் ஆறுகோடி மக்களின் பிரதிநிதியான நீங்கள் "பேசிப்ப்பார்க்கலாம்" என்று சொல்லி ஜகா வாங்கிவிட்டீர்கள்.

இப்பிரச்சினையின் ஆரம்பித்தில் வாய்மூடி மெளனம் காத்த செயலலிதா கூட தங்களை தாக்கி பேச வாய்பளித்துள்ளீர்கள்.

என்ன சப்பைகட்டு கட்டப்போகிறீர்கள்.? கர்நாடகத்தமிழர்களின் பாதுகாப்பு கருதி கிடப்பில் போட்டேன் என்று நீலிகண்ணீர் வடிக்காதீர்கள்

எங்கள் நலன் என்ற பெயரில் உங்கள் மக்களை தவிக்க வைக்காதீர்கள்.

வேண்டாம் எங்களை நாங்களே பார்த்துகொள்கிறோம்.எங்களின் தவித்த வாய்க்கு இந்த கர்னாடக அரசு தராளமாகவே தண்ணீர் தருகிறது.


அரவிந்தன்
கர்னாடக தமிழன்

Friday, March 21, 2008

பிரபல நடிகர் சோபன் பாபு மரணம்!!!

பிரபல தெலுங்க நடிகர் சோபன் பாபு நேற்று காலை சென்னையில் மாராடைப்பால் மரணமடைந்தார்.

இவருக்கு வயது 73. எராளமான தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக நடிப்புத்துறையிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வந்தார்.

அன்னாரது உடல் தகனம் இன்று சென்னையில் நடக்கிறது.

அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது கண்ணீர் அஞ்சலி

இவர் பிரபல தமிழக அரசியல் புள்ளியுடன் ஒருகாலத்தில் இணைத்து பேசப்பட்டவர்.

விவாகரத்து பெற்ற பின்னரும் நடிகர் இரகுவரன் மரணத்திற்க்கு முன்னாள் மனனவி ரோகினி வந்திருந்தார்.

அதுப்போல் சோபன் பாபுவின் மரணத்திற்கும் அந்த அரசியல் புள்ளி வருவாரா

அரவிந்தன்

Saturday, March 01, 2008

எழுத்தாளர் ஸ்டெல்லா பூருஸ் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி




பிரபல தமிழ் எழுத்தாளர் ஸ்டெல்லா பூருஸ் அவர்கள் இன்று சென்னையில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன் இறந்துபோன மனைவியின் பிரிவு தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

அவர் எழுதிய " அது ஒரு நிலா காலம்" என்ற தொடரின் மூலம் அவர் எழுத்து எனக்கு அறிமுகமாகியது.

நான் வெகுவாக விரும்பி படித்த தொடரது.

எனது கண்ணீர் அஞ்சலி

அரவிந்தன்

Thursday, February 28, 2008

எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி!!!



பல முறை உங்களை கடுஞ்சொல்லால் வசை பாடியிருக்கிறேன் அம்பலம் விவாதகளங்களில்.

ஒரு முறையேனும் சினம் கொள்ளாது பதில் அளித்த உங்கள் பெருந்தன்மை யாருக்கும் வரும்.

உங்களை கடுமையாக குற்றம்சாட்டி எழுதி வந்த எங்கள் கண்களிலும் கண்ணீர் துளிகள்.

உங்கள் எழுத்துகள் எங்களை விட்டு என்றும் பிரியாது.

ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி!!!