Saturday, June 26, 2010

தமிழ் வலைப்பூக்கள் பயிலரங்கம் எனது பார்வையில் சில துக்கடாக்கள்!!!-2

C-DAC எனும் மத்திய அரசு அரங்கில் மென்பொருள் சிடி இலவசமாய் வழுங்குகின்றனர்.சிடி கொடுங்க என்றால் பெயர்,ஊர்,தொலைப்பேசி எண் கேட்கிறார்கள்.excuse me May I have a Tamil CD please என்றவுடன் கேள்வி கேட்காமல் சிடி கொடுத்தனர் எ.கொ.ச!

கரை வேட்டி கட்டி கொண்டுருந்தால் பல அரங்குகளுக்கு உடனடியாக செல்ல அனுமதி கிடைக்கிறது.

வந்திருந்த பொதுமக்களில் ஒருவர் “உங்களை நீயா நானாவில் பார்த்திருக்கேன் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.

கூகிளில் தமிழில் தேடும் வசதி இருப்பது பலருக்கு தெரியவில்லை.விளக்கிச்சொன்னபின் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்.

தமிழ்பாடல் வரிகள் இணையத்தில் தேடுவது குறித்து ஆவலாய் கேட்கிறார்கள்.

செம்மொழி மாநாட்டின் மைய அரங்கில் ஏராளமான காக்கைகள், அந்த பக்கம் செல்லவே பயமாய் இருக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம் இத்தனை காவலர்கள் மட்டும் இல்லாதிருந்தால் இந்த மக்கள் கூட்டத்தினை நிச்சயம் சமாளித்திருக்க முடியாது.

வலைப்பூக்கள் பயிலரங்கிற்கு வந்த மொத்த பதிவர்கள் எண்ணிக்கை ------- 2 (லக்கி மற்றும் பாலபாரதி)# சும்மா ஒரு தகவலுக்காக

உங்களுக்கான “வெப்சைட்” உருவாக்கலாம் வாங்க என்ற கருப்பொருளில் வலைப்பயிற்சி கொடுத்து வருகிறோம்

3 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உங்களுக்கான “வெப்சைட்” உருவாக்கலாம் வாங்க என்ற கருப்பொருளில் வலைப்பயிற்சி கொடுத்து வருகிறோம் //

வாழ்த்துக்கள்.

Anonymous said...

Good post! You have been spreading tamil in computer for the past 10 years. Keep up the good work.

Thanks,
Jayaradha

ராம்ஜி_யாஹூ said...

wishes