Thursday, September 22, 2011

இப்ப டெக்னாலஜி ரொம்ப அட்வான்ஸ்ட்!!!

திங்கள் காலை பெங்களுரிலிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன்.


திங்கள் காலை என்பதால் எதாவது முக்கிய அலுவலக மின்னஞ்சல்கள் வந்திருந்தால் உடனடியாக பதிலளிக்க வேண்டுமென்பதால் மடிக்கணியை திறந்த்து இணையத்தொடர்பினை கொடுத்தேன்.கொஞ்ச நேரத்தில்  அலுவலக வேலையை முடித்துவிட்டு அப்படியே டிவிட்டர்,பஸ்,பேஸ்புக் போன்ற தளங்களில் மூழ்கியிருந்தேன்.


யாரோ பார்ப்பது போல் எனக்கு ஒரு உணர்வு தோன்றியது.கணினியிலிருந்து பார்வையை நகர்த்தி திருப்பி பார்த்தேன்.பக்கலிருந்தவர் உடனடியாக மெல்லிய புன்னைகையுடன் ஒரு கேள்வி கேட்டார்..

”கொஞ்ச நேரம் உங்க லாப்டாப்பை கொடுங்கறிங்களா.?மெயில் செக் பண்ணிட்டு தந்துடரேன்” .

முன்பெல்லாம் பேருந்து பயணத்தில் அருகில் உட்கார்ந்திருப்பவர் நாம் வைத்திருக்கும் செய்திதாள் அல்லது வார இதழ்களை கேட்பார்கள்..




இப்ப டெக்னாலஜி அட்வான்ஸ்ட்

No comments: