மின் மடலாற் குழுக்கள்,டிவிட்டர்,பதிவுதளங்கள்,சோசியல் நெட்வொர்க் தளங்கள் என எங்கு தமிழில் எழுதினாலும் அவர் தமிழ்பதிவர்
மருத்துவர்களுக்கும்,வழக்கறிஞர்களுக்கு எதற்க்கு சங்கம் தேவையோ அதேப்போல் பதிவருக்கும் சங்கம் தேவை
தொழில்நுட்ப நிறுவனங்களோடும்,அரசாங்கத்தோடவும் பல்வேறு காலக்கட்டங்களில் நாம் இணைந்து பணியாற்ற் வேண்டியுள்ளது அது அமைப்பு ரீதியாக இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.
Technical know how பெரும் நிறுவனங்களிடமிருந்து பெறுவது எளிமையாகிவிடும்
நாளை கூகுள் நிறுவனம் புதிய வெளியீட்டின்போது நம் கருத்தினை கேட்க துவங்குவர்
நாளை அரசாங்கம் பதிவுலகம் குறித்து ஒரு தவறான சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் குழுமமாக இருந்தால் அதை எதிர்ப்பது எளிது
அனைவரும் ஒரு குடையின் கீழ் வரவேண்டிய அவசியமும் இல்லை.விருப்பம் இருப்பவர்கள் சேரலாம் இதென்ன தொழிற்சங்கமா அனைவரும் ஒன்றியினைய
உற்ப்பினர், உறுப்பினர் அல்லாதவர் யார் வேண்டுமானலும் தொடர்ந்து எழுதலாம். இதென்ன திரைப்பட யூனியனா கார்டு இருந்தால்தான் எழுதலாம் என்று சொல்ல
குழுமம் எந்த பதிவரின் கருத்துக்கும் தடையாக இருக்கப்போவதில்லை. சங்கம் யாரின் எழுத்துக்களை தணிக்கை செய்யும் சென்சார் போர்டல்ல
இது சினிமா யூனியன் அல்ல பிடிக்காதவர்களுக்கு ரெட் கார்டு போடுவதற்கு.
இணையத்தின் கட்டற்ற சுதந்திரம் தொடர்ந்து இருக்கும் என்றே நம்புகிறேன்
உங்கள் பிரச்சினை குழுமம் ஆரம்பிப்பதா அல்லது குறிப்பிட்ட சிலர் அதை ஆரம்பிப்பதா.?
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்