Wednesday, May 20, 2009

நடுநிலைவாதிகளுக்கு சில கேள்விகள்

புலிகள் ஒழிந்தால் தான் மக்களுக்கு நல்லது பிறக்கும் என்று முன்பு கதறிய அனைத்து அதி மேதாவிகளும் அறிவு ஜீவிகளும்................


தாங்கள் நம்பும் ஹிந்து மற்றும் தினமலர் பத்திரிக்கையின் வாயிலாகவும்,

சோ மற்றும் சுப்ரமணியசாமி வாயிலாகவும்,

ராஜிவ் காந்தியின் ஆன்மா மற்றும் அவரின் குடும்பத்தார் மூலமாகவும்

தமிழீழ மக்களுக்கு ஏதேனும் வகையில் நன்மை செய்தார்களானால் அவர்கள் மனிதர்கள் என்று நம்புவோம்.

ஏனெனில் விடுதலை புலிகளும் அதன் தலைமையும் தான் உங்களுக்கு உறுத்திய இரண்டு விஷயம்!!!!

இவை இரண்டுமே இல்லை என்று இன்று இந்திய இலங்கை கூட்டுஸ்தாபனம் அறிவித்து விட்டது.

எனவே அறிவானவர்களே........

புலி எதிர்ப்பாளர்களே.......

தமிழீழ காவலர்களே செய்வீர்களா?????

அரசியல் ரீதியான முன்னெடுப்பை இலங்கை அரசோடும்,இந்திய அரசோடும்,உலக வர்த்தக நாடுகளோடும் மற்றும் இலங்கையில் வர்த்தகம் புரிய வெறியுடன் இருக்கும் பண முதலைகளுடனும் யார் பேச முடியும்?????

இது வெறும் தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் பிரச்சனை அன்று அது எப்பொழுதோ முடிந்து விட்டது!!!!

இலங்கை எனும், வர்த்தக வசீகரமுள்ள, ஒரு குட்டி தீவை தமதாக்கி கொள்ள துடிக்கும் உலக நாடுகளுக்கும், தன்னுடைய வீடு வேண்டும் எனும் உரிமை குரலிட்ட ஒரு சிறு,ஒடுக்கப்பட்ட, குறு இனத்தின் சுதந்திர தாகத்திற்கும் இடையேயான போராட்டம். போர்,

இவை எல்லாம் அறிந்து தான் பிரபகாரன் எனும் ஒரு தலைவன் முன்னேப்போதுமில்லாமல் வீறு கொண்டு எழுந்து படை அமைத்து சமர் புரிந்தான்.

அவனுக்கு தெரியும் சிங்களனை கொரில்லாக்களாக இருந்து அல்ல, சிறு போராட்ட குழுவாக இருந்தே கூட அடித்து விரட்டலாம் என்று.

எப்பொழுது இது உலக வர்த்தகத்தின் பிரச்சனையாக மாறியதோ அப்பொழுதே அவனுக்கு தெரிந்து விட்டது இதை போர்ப்படை கொண்டு தான் அணுகவேண்டும் என்று.........

இதுவே முடியாது எனும்போது, அல்லது கசப்பான முடிவுக்கு வந்து விட்டது எனும்பொழுது, இனி உலக வர்த்தகர்கள் தூக்கி எரியும் நல உதவிகளும்,பிச்சை பணமும்,உணவு பொட்டலமும் தான் ஈழ தமிழனுக்கு மிச்சம்.

ஈழமா தரப்போகிறார்கள்.....?????

கதறி அழக்கூட திராணி இல்லாதவர்களா இனி இந்த கொடுங்கோலர்களிடம் கொடி எழுப்ப போகிறார்கள்??????

சரி சமமாக நின்று சமர் புரிந்தே கிடைக்காத ஈழம் இனி பிச்சை கேட்ட கிடைக்க போகிறது???????

அப்படி ஒரு எண்ணம் இருந்தால் இது கடல் கரை அருகில் கட்டிய மணல் கோட்டை தான் நண்பர்களே..........

ஈழ தமிழன் சோறு கிடைத்தால் போதும் என்பான்!!!!

புலம் பெயர்ந்தவன் இனி அந்த அந்த நாட்டு பிரஜையாக மாறி தன இன அடையாளத்தை தொலைத்து விடுவான்.

தமிழக தமிழன் பிளாஸ்மா டிவி கிடைக்குமா என்று பேரம் பேசி மகிழ்வான்.

போராட்டத்தின் வழிகள் மாறுவது என்பது பின்னடைவோ அல்லது தோல்வியோ அல்ல ஆனால் இலக்கு மாறினால் தான் மிக பெரிய தோல்வி......

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!!!!!!

அதை விடுத்து பிச்சை போடும் எச்சகாசுக்கும், புளித்து போன சம உரிமை நாடகங்களும்,சரியானதொரு இலக்கா???

என்பதை மிக நுண்ணியமாக சர்வதேசத்துடன் சேர்ந்தது இந்த புலி எதிர்ப்பாளர்களும் சிந்திக்க வேண்டும்!!!!

சிங்களவனுடன் இயைந்து இருக்க முடியுமா அல்லது தனி நாடா என்று ஓட்டெடுப்பு எடுக்க வேண்டும் என்று அன்று கழிவிரக்கம் கொண்ட அஹிம்சை வேடம் பூண்ட வேட தாரிகள் இன்று அதே வாக்களிப்பு யோசனையை சிங்கள பேரினவாத அரசிடம் எடுத்த சொல்ல முடியுமா????

இன்னும் ஓரிரு வருடத்திற்கு ஈழ தமிழர்களுக்கு மறு வாழ்வு அளிக்கிறோம் என்ற போர்வையில் அவர்களில் இருக்கும் ஒரு ஆண் மகனை கூட உயிரோடு விடாது எல்லோரையும் கொன்று தமிழீழ பெண்களை வன் புணர்ந்து அங்கு தமிழன் என்ற ஒரு இனம் இருந்ததையே செய்தி போல சொல்ல செய்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.........


அப்பொழுது இந்த நடுநிலை வாதிகள் எந்த முகமூடி போட்டு கொண்டு வருவார்களோ என்பது தெரியவில்லை.

ஆகப்பெரிய உளவியல் ரீதியான உளைச்சலை கொண்டு பிறந்து இருக்கும் குழந்தைகளும் சிறார்களும் இனி எந்த விதமான வாழ்வியலில் இயங்க போகிறார்கள் என்பதை சற்றேனும் நாம் சிந்தித்து பார்க்கின்றோமா????

எனது குழந்தை இரவில் லைட்டை அணைத்தால் கூட என்னை இறுக அனைத்து கொண்டு அஞ்சி நடுங்கும் பொழுது எனது ஈழ குழந்தையின் வலியை பயத்திற்கு யாரை கட்டி அனைத்து கொள்ளும் மரித்த தனது தாயின் உடலையா???????

உலகத்தில் எந்த தேசத்திலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஓரளவிற்கேனும் நல்ல நிலையில் இருக்க,

அந்த தேசத்தின் குடி உரிமை பெற்றவர்களாக இருக்க,

நமது தமிழக புலம் பெயர்ந்தோர் மட்டும் இன்னும் அகதிகளாகவே இருப்பதின் மர்மம் என்ன???

என்பதை இந்த புலி எதிர்ப்பாளர்கள் ஒருமுறையேனும் யோசித்து இருப்பார்களா?????

உலகம் முழுக்க புலம் பெயர்ந்தவர்களின் போராட்டம் உச்சத்தை தொட்டு கொண்டு இருக்க,

தமிழக தமிழனின் ஆதிக்கத்தில், இருக்கும் இடம் கூட தெரியாமல்,

அழுவது, தனக்கு கூட கேட்டு விடாமல் இருந்த அகதி தமிழனை பற்றி இந்த நடுநிலையாளர்கள் ஏதேனும் தெரிந்திருக்குமா????

இலங்கைக்கு 500 கோடி அனுப்ப தெரியும் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும், இங்கு இருக்கும் அகதி தமிழனுக்கு அதில் ஒரு கோடி யை கொடுத்தாலாவது போதுமே என்ற உண்மையையாவது உணர்த்தி இருந்து இருக்கலாமே இந்த மனிதாபிமான காவலர்கள்.??????

நன்றி தோழர் தயாள் :ஆர்குட் குழுமத்தில் எழுதியது

1 comment:

அக்னி பார்வை said...

உங்களிடம் ஒரே கேள்வி, உலக வர்தகம் என்ற அடிபடையின் கீழ் ஈழ தமிழர்கள் விரட்டபட்டனர் அல்லது அழிக்கபட்டனர் என்பது உண்மை, சரி அதே காரானத்தை கொண்டு ஏன் இலங்கையையும் அழிக்கமாட்டார்கள்?

தோழரே “The International" என்ற ஆங்கில படத்தை பார்த்துவிட்டீர்களா என்று தெரியவில்லை?