Tuesday, July 24, 2007

விஜய் டிவி-நீயா-நானா-சில விளக்கங்கள்

வீ.எம் அவர்கள் எழுதிய நீயா-நானா நிகழ்ச்சிப்பற்றிய பதிவிற்க்கு நான் இட்ட பின்னூட்டம் இங்கே ஒரு பதிவாக

அன்புள்ள வீ.எம்.

14-7-2007 நடந்த நீயா நானா படப்பிடிற்க்கு நானும் சென்றிருந்தேன் பங்கேற்ப்தற்க்காக..

முதலில் அவர்கள் சொன்ன தலைப்புதமிழகத்தில் வசிக்கும் தமிழ்ர்கள் மற்றும் வேற்று மொழி பேசும் மக்கள்..

கடைசி நேரத்தில் என்ன நின்னைத்தார்களோ அந்த தலைப்பு சற்றே பிரச்சினைக்குரிய தலைப்பு அதனால் அந்த தலைப்பில் விவாதம் நடத்துவது இயலாது என்று சொல்லிவிட்டனர்

.பிறகு "பொது இடங்களில் காதலிக்கலாமா கூடாதா என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நாண் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஓலி வாங்கி பெற எந்த வித பிரச்சினை இல்லை.அதுபோல பணம் கொடுத்து யாரும் பேச அழைக்கப்பட்டதாக எனக்கு ரியவில்லை..

நல்ல மரியாதையுடன் நடத்தினார்கள்.இரவு நிகழ்ச்சி முடிந்த போது எல்லோருக்கும் இரவு உணவு,போக்குவரத்து வசதி செய்து கொடுத்தனர்.நிகழ்ச்சியில் இறுதியில் ஒரு பெண் பங்கேற்ப்பாளர் திடீரென மயங்கிவிழுந்த போது கோபி ஓடி வந்து முதலுதவி செய்தது மறக்க முடியாதது..

சில கல்லூரி மாணவ மாணவிகளை அவர்கள் தொடர்ந்து அழைக்கிறார்கள் கூட்டம் சேராததபோது என்று கேள்விப்பட்டேன்..
மற்றபடி விவாதம் மிகவும் நேர்மையாக நடத்தப்பட்டு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டது..

அன்புடன்
அரவிந்தன்.
பெங்களுர்

No comments: