Thursday, January 23, 2014

புத்தக கண்காட்சியில் அடியேன்!

சென்னை புத்தக கண்காட்சிக்கு நேற்றுதான் செல்ல முடிந்தது.மதியம் 12;45 மணிக்கு சென்றுவிட்டேன்.இரண்டு மணிக்குத்தான் உள்ளே விட்டார்கள்.

காத்திருந்த நேரத்தில் சற்று கண்ணயர்ந்தால் நல்ல உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தேன். இளம் எழுத்தாளர்களின் வாங்க வேண்டிய புத்தகங்கள் குறித்து ஏற்கனவே முடிவு செய்திருந்தபடியால் குழப்பமில்லாமல் வாங்க முடிந்தது.

முதல் போணி உயிர்மை பதிப்பகம்.

அராஜகம் ஆயிரம்-அராத்து
தற்கொலை குறுங்கதைகளே எங்கும் கண்ணில் பட்டது.அப்புறம் செல்வி அவர்கள் தேடி எடுத்து கொடுத்தார்கள்.

ராஜிவ் காந்தி நெடுஞ்சாலை- விநாயக முருகன்

அப்படியே டிஸ்கவரி பேலஸ்

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் -வா.மணிகண்டன் 

தொள்ளாயிரம் பிரதிகளுக்கு விற்பனையாம் கடையில் சொன்னாங்க..வாழ்த்துகள் மணிகண்டன்

அடுத்து
திருவள்ளுர் பெரியார் மானுட ஒன்றியம்

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் -அ.ஞா.பேரறிவாளன்.

அற்புதம் அம்மாள் அவர்களை பார்க்க முடியவில்லை.கடையில் சாக்லேட் வைத்திருந்தார்கள். ”பிபி பேஷண்ட்டுகளுக்காக வச்சிருகிங்களா” என்று கேட்டார் ஒருவர்...இல்லிங்க நேத்து 15 பேரின் தூக்குத்தண்டனை ரத்தாச்சே அதான் இனிப்பு கொடுக்கிறோம் என்றார் கடையிலிருந்த தம்பி..விரைவில் நல்ல சேதி வரும் என்ற நம்பிக்கையுடன் அடுத்து சென்ற இடம்

அகநாழிகை புத்தகநிலையம்
ஏன் என்னைக் கொல்கிறீர்கள் -கவிஞர க.ரா
டாலர் தேசத்து அனுபவங்கள் -அய்யா நல்லகண்ணு
அடை மழை- ராமலஷ்மி
தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்?-- கோவை ஞானி

அடுத்தது தமிழினி

நம்ம யுவகிருஷ்னா சிபாரிசு செய்த ஊழிக்காலம் -தமிழ்க் கவி

கடையில் கொஞ்சமாவது விவரம் தெரிஞ்ச பசங்களை வேலைக்கு அமர்த்துங்க. ஈழ எழுத்தாளர் புத்தகம் என்றால் “சார் கண்ணதாசன் புத்தகமா என்கிறார்? என்ன கொடும:(

அப்படியே எந்தவித எதிர்ப்பார்ப்புல் இல்லாமல் விகடன் பதிப்பகம்

நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த நம்ம திருப்பூர் ஜோதிஜியின் டாலர் தேசம் மற்று ராஜூ முருகனின் வட்டியும் முதலும் வாங்கினேன்.

அப்படியே பராக்கு பார்த்த படியே சென்ற இடம் சூரியன் பதிப்பகம். வாங்கியது நம்ம கே.என்.சிவராமன் அவர்களின் கர்ணனின் கவசம்...வாங்கிய இரண்டு நிமிடங்கள் ஆகியிருக்காது யாரோ தோளை தொட்ட மாதிரி இருந்தது.திரும்பிபார்த்தால் நம்ம கே.என்.சிவராமன்...ஆஹா ஆட்டோகிராப் வாங்கிடலாமுன்னு பத்தகத்தினை நீட்டினேன், அன்போடு மறுத்துவிட்டார்.எவ்வளவோ கேட்டுபார்த்தேன். முடியவில்லை

அப்படியே கீழைகாற்று பதிப்பகத்தில் ஒதுங்கினேன். வாங்கிய புத்தகம் வினவு எழுதிய ஐ.டி.துறை நண்பா

சரி அப்படியே முடித்துகொள்ளலாம் என்று நினைத்தபோது வாங்கிய புத்தகம் “சர்க்கரையா சரி செய்துவிடலாம்...அறிவு நாற்றாங்கால் பதிப்பகம்

இறுதியாக என் மச்சான் குழந்தைக்காக அபிராமி மேஜிக்பாக்ஸ் கடையில் மூனு டிவிடி.(தமிழ் பாடல்கள்)

Tuesday, December 31, 2013

மறக்கமுடியாத 2013

மறக்கமுடியாத 2013


முதல் வெளி நாடு பயணம் அதுவும் அமெரிக்கா.பல அலுவலக நிகழ்வுகளில் தலைமை தாங்கியது பரிசுகள் வ்ழங்கியது.மனைவி மற்றும் மகளின் நியாயமான ஆசைகளை சிரமமில்லாமல் நிறைவேற்றியது..மகளுக்கு வாங்கி கொடுத்த டிஜிட்டல் எஸ்.எல்.ஆர் கேமரா,புதிய நட்புகள்,வருட இறுதியில் சென்ற இன்பசுற்றுலா உத்தமம் அமைப்பில் பொதுக்குழு உறுப்பினராக தேர்தலில் வெற்றி பெற்றது.பொருளாதார ரீதியாக மனநிறைவை தந்த ஆண்டு.

நிறை குறைகளோடு என்னை ஏற்றுக்கொண்டு என்னோடு இந்த 17 வருடங்களாக வாழ்ந்து வரும் என் மனைவி பிரியதர்ஷினிக்கும் தந்தையாயிருந்தாலும் தவறு செய்தால் குற்றம் குற்றமே என்று என்னை சரியான முறையில் வழிநடத்தும் என் மகள் அமுதசுரபிக்கும் என் நன்றிகள்

அமெரிக்க பயணத்தை இனிமையாக்கிய லலித்,தமிழ்செல்வன் அண்ணா,பாஸ்டன் ஸ்ரீராம் ,முத்து,குடுகுடுப்பை, மற்றும் தினேஷ் அவர்களுக்கும் மிகுந்த நன்றிகள்.

பல வருடங்களாக என்னை தொடர்ந்து ஆதரித்து அன்போடு பழகி வரும் நண்பர் நாரயணன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றிகள் சொல்வது என் கடமை

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
Show less
1

Monday, December 31, 2012

நிறைவான 2012!


2012 ஆண்டு இன்னும் சில மணி நேரங்களில் முடிவடைய போகும் இந்த தருணத்தில் 2012-ன் சில முக்கிய தருணங்களை நினைத்து பார்க்கிறேன்.

2012 ஆரம்பம் மகிழ்ச்சியாக ஆரம்பித்தது. 2012-ல் புதிய மேலாளரின் கீழ் பணி செய்ய வேண்டி வந்தது. எப்படியிருப்பாரோ என்று பல சிந்தனைகளுடன் இர்ந்த நான் அவரை சந்தித்தபின் இப்படிப்பட்டவருடன் வேலை செய்தால் பல புதிய உச்சங்களை தொடலாம் என்று உணர்ந்தேன்.

பொதுவாக எனக்கு யாரவது தூரோகம் செய்தால் அப்படியே மறந்துவிட்டு விடுவேன்.ஆனால் இந்த வருடம் அப்படியிருக்க முடியவில்லை.சிலருக்கு தக்க தருணத்தில் பாடம் புகட்ட வேண்டியதாயிற்று,

பல வருடங்களுக்கு பிறகு இந்த வருடம்தான் விமானம் பயணம் சாத்தியமாயிற்று..அலுவலக வேலையாக கோவா சென்று வந்தேன்.

2013 -ல் வெளிநாடு பயணம் நிச்சயம்.

கூடுமான வரையில் சிரத்தையுடன் அலுவலக்த்தில் வேலை செய்தேன்.

2012-ன் மனநிறைந்த செயல் என்றால் என் மனைவியின் உறவு பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்ததுதான்.பெற்றோர் இல்லாத அப்பெண்ணுக்கு அண்ணன் நிலையிலிருந்து நல்ல பொருத்தமான மாப்பிள்ளை,அனைத்து திருமண வேலைகளுக்கு பொறுப்பேற்றுகொண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து வைத்தேன்.இந்த நேரத்தில் அனைத்து திருமண வேலைகளிலும் எனக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கும் மகளுக்கும் நன்றி சொல்ல க்டமைப்பட்டிருக்கிறேன்.

தொடர்ந்து சென்னையில் தங்கியிருக்கும்போது என்னை பாசத்துடன் கவனித்துக்கொள்ளும் என் அக்காமார் இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.

2012 ஒரளவுக்கு சேமிக்க முடிந்ததில் என்னைவிட என் மனைவிக்கு மிக்க மகிழ்ச்சி.

விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட்து,வருட இறுதியில் தமிழ் இணைய மாநாட்டில் கலந்து கொண்ட்து போன்ற நிகழ்வுகள் மன நிறைவை கொடுத்த்து.


புதியதாக பெரிய பொருட்கள் எதையும் வாங்க வில்லையென்றாலும் வலுவான பொருளாதார அடித்தளத்துடன் 2013 எதிர்நோக்கி காத்திருக்கிறேன்,

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!




Wednesday, October 10, 2012

பாஸ்டன் ஸ்ரீராம் அழைக்கிறார்..வாருங்கள் கூடி பேசி கொண்டாடுவோம்!!!!

சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் பதிவர் சந்திப்பு – அனைவரும் வாரீர்

வருகிற சனிக்கிழமை (13-10-12) அன்று மாலை 5 மணி அளவில் சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் சந்திப்பு நடக்க இருக்கிறது. பதிவர்கள், பதிவுகளை படிப்பவர்கள் மற்றும் இணையத்தில் தமிழில் புழங்குபவர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

இந்த நிகழ்வுக்கு அமைப்பாளர்கள் என்று யாரும் கிடையாது. வருகின்ற அனைவருமே அமைப்பாளர்கள் தான். இடம், நேரம் போன்றவற்றில் சந்தேகம் இருப்பின் தெளிவு பெறுவதற்காக சில தொடர்பு எண்களை கீழே கொடுத்துள்ளோம்

பாஸ்டன் ஸ்ரீராம் (சிறப்பு விருந்தினர்) - 9444639018 
பாலபாரதி – 9940203132
புதுகை அப்துல்லா – 9381377888
ஜாக்கி சேகர் –9840229629
மணிஜி – 9340089989
அரவிந்தன் 9940554501

தற்போது இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் புதியவர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

அனைவரின் வருகைக்கும் முன்கூட்டிய நன்றிகள்.

Wednesday, September 12, 2012

சுஜாதா நினைவுகள் குறித்து--வானொலியில் நான்




அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் மாணவர்களால் நடத்தப்படும் Its different என்ற பண்பலை வானொலியில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் நினைவாக 2008 வருடம் ஒளிப்பரப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் தொலைப்பேசி வழியாக தெரிவித்த சுஜாதா குறித்து என பார்வையினை கீழ்காணும் சுட்டியில் கேட்கலாம்.15-ஆம் நிமிடத்தில் என் பேச்சு ஆரம்பமாகிறது.

http://www.itsdiff.com/files/Mar52008-SujathaSpecial-www-itsdiff-com-Part3of3.mp3

Monday, August 27, 2012

கூண்டிலேயே வளர்ந்த பிராய்லர் கோழிகள் அல்லவா :((

சென்ற வெள்ளியிரவு சென்னையிலிருந்து பெங்களுருக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.வண்டி வேலூரை தாண்டி சில நிமிடங்கள் ஆகியிருந்தது.

ஆழ்ந்த தூக்கத்திற்கு தயாராகி கொண்டிருந்தேன்..தீடீரென வண்டியின் வேகம் தடைப்பட்டது.எதோ முனகல் சத்தம் கேட்டது போல் தோன்றியது.உடனே கண் விழித்து பார்த்தேன்.
எதிரே  பிராய்லர் கோழிகளை ஏற்றி வந்த மினி டெம்போ தலைகீழாக கவிழ்ந்து கிடந்தது தெரிந்தது.

வண்டியை ஓட்டுநர் நிறுத்தியவுடன் வண்டியிலிருந்த பெரும்பாலனோர் இறங்க தொடங்கினர். அப்பொழுது ஒருவர் வண்டியின் படிகள் வழி இறங்க நேரமாகும் என்பதால் ஒட்டுநர் இருக்கையில் வழியாக வேகமாக குதித்தார்.

இறங்கியவுடன்,அந்த இடம் முழுவதும் கோழிகள் அடிப்பட்டும்,சில இறந்தும் காணப்பட்டன.கோழிகள் அபயகுரல் மனதை என்னவோ செய்தது.உடனடியாக வண்டியை தூக்கி நிறுத்தி வண்டி ஓட்டுநரை வெளியே இழத்து தூக்கி தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினோம்.நல்ல வேளையாக பெரிய காயம் எதுவுமில்லை.

அதற்குள் ஒருவா 108-க்கு தொலைப்பேசிவிட்டார்.வண்டி வரும் வரை காத்திருந்தோம். அப்பொழுது யாரோ அடிப்பட்டு முனகும் சத்தம் கேட்டது. விபத்து நடந்த பகுதியிலிருந்து ஒரு 20 அடி தள்ளி ஒருவர் அடிப்பட்டு கிடந்தது தெரிந்தது.வண்டியின் கூரை மேல் உட்கார்ந்து வந்தவராம்.

நெடுஞ்சாலை விபத்து மீட்பு வண்டி உடனடியாக வந்தது.

வண்டியின் கூண்டிலிருந்து வெளியே வந்த கோழிகள் அங்கேயே (தப்பித்து செல்லாமல்) மேய்ந்து கொண்டிருந்தன.

கூண்டிலேயே வளர்ந்த பிராய்லர் கோழிகள் அல்லவா :((

Saturday, December 31, 2011

ஈரோடு சங்கமம்-2011 அமைப்பாளர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!

ஈரோடு பதிவர் சங்கமம் குறித்து அனேகர் எழுதிவிட்ட பின்னர் எழுத இன்னும் என்ன இருக்கிறது என்று தோன்றினாலும்,15 பதிவரை அழைத்து கெளரவப்படுத்தியவர்களை,விருந்தோம்பலுக்கு உதாரணமாக இருந்தவர்களை,பாசத்தோடு அழைத்தவர்களை பாராட்டி எழுதுவது சகப்பதிவர்களின் கடமை என்ற வகையில் எழுதிகிறேன்.

சென்ற வருடம் வருகிறேன் என்று உறுதியாக சொன்ன பின்பும் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்லமுடியவில்லை.இந்த வருடம் அழைப்பு வந்தவுடன் நிச்சயம் செல்லவேண்டும் என்று  முடிவெடுத்தேன்.பெருவாரியான சென்னை பதிவர்களின் வருகையும்  இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

சென்னையில் பணி,குடும்பம் பெங்களுரில் ஆகவே வாரயிறுதி எப்பவும் பெங்களுர்.16-தேதி வெள்ளியிரவு பணி முடிந்ததும் பெங்களுர் பயணம்.சனிக்கிழமை காலை மகள் பள்ளியில் விளையாட்டு போட்டியை காணச் சென்றேன்.அதிகம் எதிர்ப்பார்த்த என் மகள் கலந்து கொண்ட 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தின் முடிவு வேறு மாதிரியாக வந்தது.

மதியம் சற்று ஒய்வு எடுத்தபின் இரவு ஈரோடு பயணம்.பேருந்தில் ஏறிய உடன் ஜீவ்ஸிடமிருந்து அழைப்பு “எங்க இருக்கிங்க அரவிந்தன்.?” ஜீவ்ஸ் நான் எலெக்ட்ரானிக் சிட்டி தாண்டிட்டேன்” என்றேன்.சரிங்க காலை 4 மணிக்கு ஈரோட்டில் சந்திப்போம்” என்றார் ஜீவ்ஸ்.

மூன்று மணிக்கே ஈரோடு சென்றுவிட்டேன்.4 மணிக்குத்தான் வருவதாய் ஜாபரிடம் சொல்லியிருந்தேன் ஆகவே இப்ப தொந்தரவு செய்யவேண்டாம் என்று பேருந்து நிலையத்தில் காத்திருக்க முடிவு செய்தேன்.அப்பொழுது” 24 மணி நேரம் டீ,காபி,தோடை,இட்லி கிடைக்கும்” என்ற கெளரிசங்கர் உணவு விடுதி கண்ணில் பட்டது.சூடான நெய் தோசை,காபி சாப்பிட்டேன்.இங்கு ஒன்றை குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும்.பொதுவாக பேருந்து நிலையத்தில் இருக்கும் உணவு விடுதிகளில் சுத்தம் மற்றும் சுவை பெரிய அளவில் இருக்காது.கெளரி சங்கரில் இரண்டும் போதுமான அளவில் இருந்தது.உணவு பரிமாறியவர் அந்த இரவு நேரத்திலும் சட்டையை பேண்ட்டுக்குள் இன் செய்து பெல்ட்கட்டி நேர்த்தியாக இருந்தார்.

சாப்பிட்டு காலாற நடக்கத் துவங்கினேன்.நேரம் அதிகாலை 3:30 சாலையில் மனித நடமாட்டமோ வாகன ஓட்டமோ ஏதும் இல்லை.

பாதி தூரம் சென்றவுடன் ஜாபரை தொலைப்பேசியில் அழைத்தி விடுதி முகவரியை உறுதிபடுத்திகொண்டேன்.ஜாபர் ”ஏன் பேருந்துநிலையத்தில் இருந்தே கூப்பிட்டிருக்கலாமே ஏன் நடந்து வந்திங்க” என்று கேட்டார்.பரவாயில்லைங்க் காலையில்  நல்ல நடைப்பயிற்சி என்றேன்,


வாசலில் நின்று சிரித்த முகமோடு வரவேற்றார்.2 மணிக்கு படுத்து 3:30 எழுந்துவிட்டிருந்தார் ஜாபர்.அறிமுகங்களுக்குபிறகு வழக்கம்போல அரசியல் பேச ஆரம்பித்தோம்.தமிழ் தேசியம் குறித்து வீவாதங்கள் 4:30 மணி வரை நீண்டது.அப்போது ஜீவ்ஸ் ஈரோடு வந்துவிட்டதாக ஜாபரிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார்.ஜீவ்ஸை அழைத்து வர ஜாபர் கிளம்ப, நான் சற்று கண்ணயர்ந்தேன். சிறிது நேரத்தில் ஜீவ்ஸ் வந்தார்.பல வருடங்களுக்கு பிறகு ஜீவ்ஸ் பார்க்கிறேன்.வந்தவுடன் கேமாராவை கையில் எடுத்தார்.ஜாபரை பல கோணங்களில் படமெடுத்தார்.ஜாபருக்கு ஆச்சர்யம் ”புகைப்படத்தில் நான் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறேன்” என்று.

ஜாபர் நீங்கள் நேரிலும் மிக அழகாக இருக்கிறீர்கள்!

உடனே ஜாபருக்கு அடுத்த வேலை இணைய இரட்டையர்களான தம்பி லக்கி மற்றும் அதிஷாவை அழைத்து வரும் பணி.

லக்கியும் அதிஷாவும் சிரித்த முகத்துடன் பயண களைப்பு எதுமின்றி அறைக்கு வந்து சேர்ந்தனர்.மீண்டும் அரட்டை கச்சேரி தொடர்ந்தது. ஒரு 7 மணி இருக்கும்.  அப்பொழுது தாடி,ஓங்குதாங்கான உருவத்துடன் எங்கள் ஒருவர் அறைக்கு வந்தார்.கொஞ்சமும் அடையாளம் தெரியவில்லை.அரவிந்த் அண்ணே என்று அழைத்தவுடன் அடையாளம் தெரிந்தது.நம்ம பாசக்கார பாலபாரதி.

நாங்கள் விழாவிற்க்கு செல்ல தயாராகி கொண்டிருந்த நேரத்தில் ஜாபரும் வீட்டிற்கு சென்று தயாராகி வந்தார்.

தாமோதர் அவர்களின் மகிழுந்து எங்களை அழைத்துச்செல்ல காத்திருந்தது.வண்டியில் இடமிருந்த்தும் அதிஷா ஏற மறுத்துவிட்டார்.அதிஷாவுக்கு காரில் செல்ல பயமாம்.காரில் பயணமே செய்ததில்லையாம்.பிறகு ஜாபரின் வண்டியில் வந்தார்.நன்றி ஜாபர்!

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழகம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பது குறித்து விவாதித்துகொண்டே விழா அரங்கை அடைந்தோம்.

வாசலில் விழா அழைப்பாளர்கள் அன்போடும் வாய் நிறைய புன்னைகையோடும் வரவேற்றார்கள்.உடனே சாப்பிடும் இடத்திற்கு சென்றோம்..நான் பட்டு வேட்டி கட்டியிருந்தேன்,தோளில் லாப்டாப் பை.அதைப்பார்த்தவுடன் தவில் இங்க இருக்கு நாதஸ் எங்க இருக்கு மணிஜி என்னை கலாய்க்க ஆரம்பித்தார் :)

சாப்பிட்டு கொண்டிருந்த ஈரோடு கதிர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு”வாங்க அரவிந்தன் எப்படி இருக்கிங்க” என்று அன்போடு விசாரித்தார்.நன்றி கதிர்!


அபி அப்பாவை முதன்முறையாக பார்த்தேன்.மகிழ்ச்சியான அரட்டை தொடர்ந்தது,விரா,மணிஜி,தம்பி கேஆர்பி.ஜாக்கி,லக்கி,அதிஷா,அகநாழிகை வாசு என்று எல்லாம தெரிந்த பதிவர்கள்.

அரங்கம் நிறைந்தது.விழா ஆரம்பித்தது.தகுதியுள்ள 15 பதிவர்கள் அழைத்து கெளரவிக்கப்பட்டனர்.லக்கி ,ஜாக்கி மற்றும் செந்தில் அழைக்கப்பட்டவுடன் எனோ என்னையே அழைத்த மாதிரி ஒரு மகிழ்வான உணர்வு தோன்றியது.

நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் உரை மிக நேர்த்தியாக இருந்தது.நிச்சயம் பல முறை ஒத்திகை  பார்த்திருப்பார்கள்.Its simply flawless!


விழா நடக்கும் நேரத்தில் உடன் இருந்து அன்போடு கவனித்தார் பதிவர் சங்கவி.களையான சிரித்த முகம்.நன்றி சங்கவி!

மதிய உணவு சொன்னால் நம்ம மாட்டீர்கள் சைவ உணவு சாப்பிட காத்திருக்க வேண்டியிருந்தது.ஆருரான் அவர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் பாசத்துடன் கவனித்தார்.நன்றி ஆருரான்.(உங்களிடம் தமிழ் தேசியம் குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேச வேண்டும்).


சாப்பிட்ட உடன் எல்லோருடன் புகைப்படம் எடுத்துகொண்டேன்.தம்பி கேஆர்பி செந்தில் வாங்கண்ணே அறைக்கு போய் ஒய்வெடுப்போம் என்று அழைத்தார்.எல்லோரிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

மோகன் குமார்,செந்தில்,ஆருர் முனா செந்தில்,பிலாசபிபிரபாகரன்,மெட்ராஸ் பவன் சிவா மற்றும் செந்திலின் தம்பி ஆகியோருடன்  அறைக்கு வந்து சேர்ந்தேன்,

சின்ன தூக்கம்,டீ அரட்டை என்று மாலைப்பொழுது கழிந்தது. இரவு மீண்டும் சென்னை பயணம்.

விழா அழைப்பாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!!