Saturday, December 31, 2011

ஈரோடு சங்கமம்-2011 அமைப்பாளர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!

ஈரோடு பதிவர் சங்கமம் குறித்து அனேகர் எழுதிவிட்ட பின்னர் எழுத இன்னும் என்ன இருக்கிறது என்று தோன்றினாலும்,15 பதிவரை அழைத்து கெளரவப்படுத்தியவர்களை,விருந்தோம்பலுக்கு உதாரணமாக இருந்தவர்களை,பாசத்தோடு அழைத்தவர்களை பாராட்டி எழுதுவது சகப்பதிவர்களின் கடமை என்ற வகையில் எழுதிகிறேன்.

சென்ற வருடம் வருகிறேன் என்று உறுதியாக சொன்ன பின்பும் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்லமுடியவில்லை.இந்த வருடம் அழைப்பு வந்தவுடன் நிச்சயம் செல்லவேண்டும் என்று  முடிவெடுத்தேன்.பெருவாரியான சென்னை பதிவர்களின் வருகையும்  இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

சென்னையில் பணி,குடும்பம் பெங்களுரில் ஆகவே வாரயிறுதி எப்பவும் பெங்களுர்.16-தேதி வெள்ளியிரவு பணி முடிந்ததும் பெங்களுர் பயணம்.சனிக்கிழமை காலை மகள் பள்ளியில் விளையாட்டு போட்டியை காணச் சென்றேன்.அதிகம் எதிர்ப்பார்த்த என் மகள் கலந்து கொண்ட 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தின் முடிவு வேறு மாதிரியாக வந்தது.

மதியம் சற்று ஒய்வு எடுத்தபின் இரவு ஈரோடு பயணம்.பேருந்தில் ஏறிய உடன் ஜீவ்ஸிடமிருந்து அழைப்பு “எங்க இருக்கிங்க அரவிந்தன்.?” ஜீவ்ஸ் நான் எலெக்ட்ரானிக் சிட்டி தாண்டிட்டேன்” என்றேன்.சரிங்க காலை 4 மணிக்கு ஈரோட்டில் சந்திப்போம்” என்றார் ஜீவ்ஸ்.

மூன்று மணிக்கே ஈரோடு சென்றுவிட்டேன்.4 மணிக்குத்தான் வருவதாய் ஜாபரிடம் சொல்லியிருந்தேன் ஆகவே இப்ப தொந்தரவு செய்யவேண்டாம் என்று பேருந்து நிலையத்தில் காத்திருக்க முடிவு செய்தேன்.அப்பொழுது” 24 மணி நேரம் டீ,காபி,தோடை,இட்லி கிடைக்கும்” என்ற கெளரிசங்கர் உணவு விடுதி கண்ணில் பட்டது.சூடான நெய் தோசை,காபி சாப்பிட்டேன்.இங்கு ஒன்றை குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும்.பொதுவாக பேருந்து நிலையத்தில் இருக்கும் உணவு விடுதிகளில் சுத்தம் மற்றும் சுவை பெரிய அளவில் இருக்காது.கெளரி சங்கரில் இரண்டும் போதுமான அளவில் இருந்தது.உணவு பரிமாறியவர் அந்த இரவு நேரத்திலும் சட்டையை பேண்ட்டுக்குள் இன் செய்து பெல்ட்கட்டி நேர்த்தியாக இருந்தார்.

சாப்பிட்டு காலாற நடக்கத் துவங்கினேன்.நேரம் அதிகாலை 3:30 சாலையில் மனித நடமாட்டமோ வாகன ஓட்டமோ ஏதும் இல்லை.

பாதி தூரம் சென்றவுடன் ஜாபரை தொலைப்பேசியில் அழைத்தி விடுதி முகவரியை உறுதிபடுத்திகொண்டேன்.ஜாபர் ”ஏன் பேருந்துநிலையத்தில் இருந்தே கூப்பிட்டிருக்கலாமே ஏன் நடந்து வந்திங்க” என்று கேட்டார்.பரவாயில்லைங்க் காலையில்  நல்ல நடைப்பயிற்சி என்றேன்,


வாசலில் நின்று சிரித்த முகமோடு வரவேற்றார்.2 மணிக்கு படுத்து 3:30 எழுந்துவிட்டிருந்தார் ஜாபர்.அறிமுகங்களுக்குபிறகு வழக்கம்போல அரசியல் பேச ஆரம்பித்தோம்.தமிழ் தேசியம் குறித்து வீவாதங்கள் 4:30 மணி வரை நீண்டது.அப்போது ஜீவ்ஸ் ஈரோடு வந்துவிட்டதாக ஜாபரிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார்.ஜீவ்ஸை அழைத்து வர ஜாபர் கிளம்ப, நான் சற்று கண்ணயர்ந்தேன். சிறிது நேரத்தில் ஜீவ்ஸ் வந்தார்.பல வருடங்களுக்கு பிறகு ஜீவ்ஸ் பார்க்கிறேன்.வந்தவுடன் கேமாராவை கையில் எடுத்தார்.ஜாபரை பல கோணங்களில் படமெடுத்தார்.ஜாபருக்கு ஆச்சர்யம் ”புகைப்படத்தில் நான் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறேன்” என்று.

ஜாபர் நீங்கள் நேரிலும் மிக அழகாக இருக்கிறீர்கள்!

உடனே ஜாபருக்கு அடுத்த வேலை இணைய இரட்டையர்களான தம்பி லக்கி மற்றும் அதிஷாவை அழைத்து வரும் பணி.

லக்கியும் அதிஷாவும் சிரித்த முகத்துடன் பயண களைப்பு எதுமின்றி அறைக்கு வந்து சேர்ந்தனர்.மீண்டும் அரட்டை கச்சேரி தொடர்ந்தது. ஒரு 7 மணி இருக்கும்.  அப்பொழுது தாடி,ஓங்குதாங்கான உருவத்துடன் எங்கள் ஒருவர் அறைக்கு வந்தார்.கொஞ்சமும் அடையாளம் தெரியவில்லை.அரவிந்த் அண்ணே என்று அழைத்தவுடன் அடையாளம் தெரிந்தது.நம்ம பாசக்கார பாலபாரதி.

நாங்கள் விழாவிற்க்கு செல்ல தயாராகி கொண்டிருந்த நேரத்தில் ஜாபரும் வீட்டிற்கு சென்று தயாராகி வந்தார்.

தாமோதர் அவர்களின் மகிழுந்து எங்களை அழைத்துச்செல்ல காத்திருந்தது.வண்டியில் இடமிருந்த்தும் அதிஷா ஏற மறுத்துவிட்டார்.அதிஷாவுக்கு காரில் செல்ல பயமாம்.காரில் பயணமே செய்ததில்லையாம்.பிறகு ஜாபரின் வண்டியில் வந்தார்.நன்றி ஜாபர்!

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழகம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பது குறித்து விவாதித்துகொண்டே விழா அரங்கை அடைந்தோம்.

வாசலில் விழா அழைப்பாளர்கள் அன்போடும் வாய் நிறைய புன்னைகையோடும் வரவேற்றார்கள்.உடனே சாப்பிடும் இடத்திற்கு சென்றோம்..நான் பட்டு வேட்டி கட்டியிருந்தேன்,தோளில் லாப்டாப் பை.அதைப்பார்த்தவுடன் தவில் இங்க இருக்கு நாதஸ் எங்க இருக்கு மணிஜி என்னை கலாய்க்க ஆரம்பித்தார் :)

சாப்பிட்டு கொண்டிருந்த ஈரோடு கதிர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு”வாங்க அரவிந்தன் எப்படி இருக்கிங்க” என்று அன்போடு விசாரித்தார்.நன்றி கதிர்!


அபி அப்பாவை முதன்முறையாக பார்த்தேன்.மகிழ்ச்சியான அரட்டை தொடர்ந்தது,விரா,மணிஜி,தம்பி கேஆர்பி.ஜாக்கி,லக்கி,அதிஷா,அகநாழிகை வாசு என்று எல்லாம தெரிந்த பதிவர்கள்.

அரங்கம் நிறைந்தது.விழா ஆரம்பித்தது.தகுதியுள்ள 15 பதிவர்கள் அழைத்து கெளரவிக்கப்பட்டனர்.லக்கி ,ஜாக்கி மற்றும் செந்தில் அழைக்கப்பட்டவுடன் எனோ என்னையே அழைத்த மாதிரி ஒரு மகிழ்வான உணர்வு தோன்றியது.

நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் உரை மிக நேர்த்தியாக இருந்தது.நிச்சயம் பல முறை ஒத்திகை  பார்த்திருப்பார்கள்.Its simply flawless!


விழா நடக்கும் நேரத்தில் உடன் இருந்து அன்போடு கவனித்தார் பதிவர் சங்கவி.களையான சிரித்த முகம்.நன்றி சங்கவி!

மதிய உணவு சொன்னால் நம்ம மாட்டீர்கள் சைவ உணவு சாப்பிட காத்திருக்க வேண்டியிருந்தது.ஆருரான் அவர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் பாசத்துடன் கவனித்தார்.நன்றி ஆருரான்.(உங்களிடம் தமிழ் தேசியம் குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேச வேண்டும்).


சாப்பிட்ட உடன் எல்லோருடன் புகைப்படம் எடுத்துகொண்டேன்.தம்பி கேஆர்பி செந்தில் வாங்கண்ணே அறைக்கு போய் ஒய்வெடுப்போம் என்று அழைத்தார்.எல்லோரிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

மோகன் குமார்,செந்தில்,ஆருர் முனா செந்தில்,பிலாசபிபிரபாகரன்,மெட்ராஸ் பவன் சிவா மற்றும் செந்திலின் தம்பி ஆகியோருடன்  அறைக்கு வந்து சேர்ந்தேன்,

சின்ன தூக்கம்,டீ அரட்டை என்று மாலைப்பொழுது கழிந்தது. இரவு மீண்டும் சென்னை பயணம்.

விழா அழைப்பாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!!






2 comments:

RAVI said...

பல வருடங்களுக்குப் பிறகு ஜீவ்ஸப்பாக்குறீங்களா..?
இனி வருடா வருடம் பாத்துரலாம் சங்கமத்தின் மூலம்.
வாழ்த்துக்கள் நண்பா.

CS. Mohan Kumar said...

உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி. சென்னையில் என் வீட்டுக்கருகில் வேலை பார்க்கிறீர்கள். அவசியம் ஒரு முறை சந்திப்போம்

ஜீவ்ஸ் பெங்களூர் தானே? ஆனாலும் அங்கு பார்ப்பதில்லையா?