Tuesday, October 09, 2007

எனக்கு தாலி பிச்சை போடுங்க,முன்னாள் பிரதமரின் மனைவி கதறல்.

நேற்று பெங்களூரில் நடந்த மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டத்தில் நடைப்பெற்ற ஒரு சம்பவம்.

திரு.தேவே கவுடா அவர்கள்,குமாரசாமி, ஆட்சியியை பா.ஜ.க விடம் ஒப்படைத்தால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் கலக்கமடைந்த தேவே கவுடா அவர்களின் மனைவி அக்கட்சியின் எம்.எல்.ஏ க்களிடம் தயுவு செய்து பா.ஜ.கா விற்க்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள்.

அப்படி செய்தால் என் கணவர் தற்கொலை செய்துகொள்வார்.ஆகவே எனக்கு தாலி பிச்சை அளியுங்கள் என்று கதறியதாக தெரிகிறது.

குமாரசாமி அவர்களின் மூத்த சகோதர் ரேவண்ணா,தம்பி நமக்கு நம்ம அப்பாவின் உயிர்தான் முக்கியம் ஆட்சி அல்ல.தயவு செய்து பா.ஜ.கா வுடன் சேராதே என்று குமாராசாமியின் காலில் விழுந்து கெஞ்சியதாக சொல்லப்படுகிறது.

இதன்பிறகு,குமாரசாமி மனம் மாறியதாக சொல்லப்படுகிறது.

அன்புடன்
அரவிந்தன்

1 comment:

ரவி said...

கர்'நாடகத்தில்' இந்த காட்சி சகஜம்தான் !!!!